மனதின் கதை

அ) கவிதைகள்

கையில் கிடைக்காத
மனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்
கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்
புவியில் மனித இனம்
மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்று
தேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்
புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்
வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்
எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்
கண்டான் சிறந்த இடம்
மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்
தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்
வாழ்வின் காரணம் புரியும்
கதையும் முடிந்தது அங்கே
தேடல் துவங்கிடும் இங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *