புத்தகம் வாசித்தேன் – சிறப்புச் சிறுகதைகள்

ஐ) புத்தகம் வாசித்தேன்

தலைப்பு – புத்தம் புதிய சிறப்புச் சிறுகதைகள்
விகடன் பிரசுரம்
வகை – சிறுகதைகள்

சமீபத்துல படிச்ச புத்தகங்கள்-ல உடனடியா குறிப்பிடவேண்டியது இந்த சிறுகதைத் தொகுப்பு. பதினைந்து கதைகள் இருக்கு, ஒவ்வொன்னும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதினது.

இதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது இரா. முருகன் எழுதின இருபத்துநாலு பெருக்கல் ஏழு (24 x 7) . கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை வேலைன்னு எப்படி மக்களை சக்கையா பிழிஞ்சி எடுக்கிறாங்கன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்காரு.

சீனியர் மேனேஜர் பதவி இருந்தாலும், கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்கலையின்னா மேலிடத்துலருந்து என்னமாதிரியெல்லாம் அழுத்தம் கொடுப்பாங்க… எப்படிப்பட்ட அலட்சியங்களையெல்லாம் சந்திக்கணும் (முகம் துடைக்க டாய்லெட் டிஸ்யூ..)..

“டெலிவிஷன் பெட்டிக்குள்ள இருந்து நாலைந்து பேர் இறங்கி வராங்க…” ” டியூப்லைட் லருந்து ஆட்கள் இறங்கி வராங்க..” இப்படி உளரும் ஆளைப்பார்த்து முதல்ல சிரிப்பா வந்தாலும், இரவு பகல் பார்க்காம கண்ணாடிப்பெட்டிக்குள்ள இருந்து இருந்து அவங்க மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கும்னு யோசிக்க வைக்கிறார். மொத்தத்துல எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அடுத்ததா நல்லா இருக்கிறது
எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய உதிரிப் பொய்கள்,
(மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக வீட்டுவேலை பார்க்குமிடங்களில் வெவ்வேறு பொய் சொல்லும் அம்மா – கடைசி வரில இருக்கு கதை )

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதின நல்லதோர் வீணை,
(திருமண வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பள்ளி வாத்தியாரின் மகள், இராஜசேகரன் காதலை சொல்லி இருக்க வேண்டுமோ என்று ஏங்கும் நண்பனுடன் நாமும் ஏங்குவோம் )

ஐ ரா சுந்தரேசன் எழுதின பாலத்துக்கு அடியில் பகவத் கீதை,
(எந்தக் காரியத்தையும் இறைவன் தொண்டாக அர்ப்பணமாகச் செய்யலாம். துப்புரவு தொழிலும் சேர்த்துத்தான்)

ஐஸ்வர்யன் எழுதின வலி சூழ் வாழ்வு,
(திருநங்கையாக மாற விழைந்த ஒரு மாணவன் தன் ஆசிரியரின் முயற்சியால், மனவலிமையால் மீண்டு வருவது)

அனுராதா ரமணன் எழுதின அகிலம்
(என்ன சொல்றது.. படிச்சுப்பாருங்க )

….மற்ற கதைகளும் படிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *