குழந்தைகளின் கூச்சல்
கூரையைப் பிளக்கிறது
அமைதியாய் இரு
மெல்லப் பேசு
சிறிது வாயை மூடு
என்று அதட்டியபடியே
தொடர்கிறது என் பணி..
வீடே அமைதியாய்
வெகுநேரம் நிசப்தமாய்
ஓடியாடும் சப்தமில்லை
வாய்ப்பேச்சும் கேட்கவில்லை
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
அமைதியாய் என் பிள்ளை
தாங்கவில்லை தாயெனக்கு
ஏன் இப்படி இருக்கின்றாள்
என் பிள்ளைக்கென்ன ஆயிற்று?
காய்ச்சலோ? உடல்வலியோ?
வாய் மூடி அமர்ந்தவளை
வாரித் தூக்கி அணைக்கின்றேன்
கொஞ்சமும் தாளமுடிவதில்லை
குழந்தைகளின் மௌனத்தை.
arumai
very difficult to judge a childs silence…