பாலைவனச் சோலை

அ) கவிதைகள்

வீதியே வெந்திடும் வெப்பத் தணலில்
ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை
நாடியே ஓடிடும் பட்டுக் குருகின்
நாட்டியம் காண்கயில்..

அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி
அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க
தத்தையென தாவிடும் குழவியின்
தளர் நடை காண்கயில்..

பல்வேறு கடமையும் கவலையும் சூழ
தாவித் தாவித் தவித்துக் கொண்டு
பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில்
சோலை மலர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *