உயிர்ப்பு

அ) கவிதைகள்
விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை

உயிர்ப்பு

இருண்ட உலகத்தில்
இருவராய் உருக்கொண்டோம்
எனக்கு நீதுணையாம்
உனக்கு நான் துணையாம்
அன்னை உணவளிக்க
ஆனந்தம் பலகண்டோம்
அவள்முகம் கண்டிலோமவள்
அன்பினை காண்கிறோம்
உயிரினில் பங்களித்தாள்
எனக்கும் உனக்குமாக
எத்துனை இன்பமிங்கே
அத்துனை உயர்ந்தவளுக்குள்

உலகம் சுருங்கிட்டதுவோ
உருவம் பெருகிட்டதுவோ
இங்கே இருந்திடலாம்
என்றெண்ணிய எண்ணம்பொய்யாக
இன்னொரு உலகம் போக
நாளும் நேரமும் நெருங்க
பயத்தின் மிகுதியில் நாமும்
பலவிதம் யோசிக்கின்றோம்

அங்கென்ன இருக்குமென்றாய்
இவ்வுலகே சொர்கமென்றாய்
இங்குபலர் வாழ்ந்தாரென்றாய்
இவ்வுலகம் திரும்பாரென்றாய்
வாழ்ந்தவர் சென்றதுண்டு
சென்றவர் வந்ததில்லை
இங்கேயெ இருப்பேனென்றாய்
என்னாசைகூட அதுதான்
இங்கிருந்து சென்ற யாரும்
மீண்டிங்கு வந்ததில்லை

அன்னாளும் வந்திட்டதுவே
கருவுலகை விட்டகன்றோமே
இதென்ன பிரகாசவுலகம்
இத்துனை அழகாஇங்கு
அன்னையை கண்டோமிங்கு
அன்பினாய் சொர்கமிதுதான்
இதனையா வேண்டமென்றோம்
இங்கா வரமறுத்தோம்
மகிழ்ச்சியின் மிகுதியில்
நாமும் கதறியழத்துவங்க
அன்னையின் அரவணைப்பு
சொர்கம் சொர்கமிதுதான்.

இதில் கருவுலகை விட்டு பிரிவது இந்நில உலகை விட்டு பிரிவதாகவும் பொருள் கொள்ளலாம்.

அன்னை – இறைவன் / பேரொளி

கதை எனக்கு மிகவும் பிடித்தது..அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.. சிறுகதையாகவே அளிக்காமல் எனக்கு பழகிய, இயன்ற முறையில் அளித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *