மதம் (6.10.2003)

அ) கவிதைகள்

மதம் பிடித்த மனிதனுக்கு
மனதின் வலியும் புரியுமோ?
மகாத்மாக்கள் பெற்ற மண்ணில்
மானுடம்தான் தோற்குமோ?
வியர்வை மழையில் விளைந்த பயிரை
குருதி வெள்ளம் அழிக்குமோ
ஒற்றுமையில் உயர்ந்த மண்ணை
வேற்றுமை நீர் அரிக்குமோ?
புல்லுருவிகல் புகுந்து நம்முள்
புதிய குழப்பம் விளைக்குமோ?
ஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம்
உரக்கச் சிரித்து மகிழுமோ?
அன்னை மடியில் அமர்ந்து கொண்டே
அவளுக்கிங்கு துரோகமோ?
மகவிரண்டை மோதவிட்டே
வாழ்வதுதான் மானமோ?
இன்றும் நமக்கு ஓருயிர்தான்
மாற்றம் ஏதும் நிகழ்ந்ததோ?
உதிர வெள்ளம் பெருகக் கண்டும்
இன்னும் கூட மயக்கமோ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *