கோவம்

அ) கவிதைகள்

எங்கிருந்து வந்தனையோ எங்கு சென்றனையோ தவம் செய்யவில்லை நான் தானாக வந்தாய் நீ வழியனுப்பவில்லை நான் வந்தவழி சென்றாய் நீ வந்த சில நாழிகையில் என்வசத்தில் நானில்லை வசவுமொழி கேட்டனரோ வாயடைத்து நின்றனரோ? கடும்பார்வை கண்டனரோ கண் கலங்கிச் சென்றனரோ?? என்னை நீ ட்கொள்ள எங்கே நான் சென்றுவிட்டேன் என் சிரத்தில் நீயேற உன் அடிமை ஆனேனோ? என் உடமை நீயில்லை என்னை நீ விட்டுவிடு வாராமல் நீ இருந்தால் வாயில்ல பூச்சிதான் நான் ஆனால்.. வாழவேண்டும் …

Continue Reading

நான் நீயில்லை

அ) கவிதைகள்

எனக்குத் தெரிந்தவை உனக்குத் தெரியாமலும் எனக்குப் புரிந்தவை உனக்குப் புரியாமலும் எனக்குப் பிடித்தவை உனக்குப் பிடிக்காமலும் எனக்கு நன்மையானவை உனக்குத் திமையாகவும் எனக்குக் கவிதையானவை உனக்குக் கிறுக்கலாகவும் எப்படியும் தெரியலாம்.. எல்லாமே சாத்தியம்தான். ஏனென்றால்.. எனக்கு ‘நான்’ எனத்தெரிவது உனக்கு ‘நீ’ எனத்திரிவதால்

Continue Reading

பாலைவனச் சோலை

அ) கவிதைகள்

வீதியே வெந்திடும் வெப்பத் தணலில் ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை நாடியே ஓடிடும் பட்டுக் குருகின் நாட்டியம் காண்கயில்.. அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க தத்தையென தாவிடும் குழவியின் தளர் நடை காண்கயில்.. பல்வேறு கடமையும் கவலையும் சூழ தாவித் தாவித் தவித்துக் கொண்டு பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில் சோலை மலர்கிறது

Continue Reading

தொலைந்து போன(வர்கள்)வைகள்..1

அ) கவிதைகள்

என்றோ ஒருநாள் ஏதோவொரு காகிதத்தில் அவசரமாக கிறுக்கிவைத்த நண்பனின் தொலைபேசியெண் காணக்கிடைத்தது இன்று காலங்களை வென்று கண்ணீர் பரிசென தந்து.. தொலைபேசி இருக்கலாம் பேசியவன் தொலைந்துவிட்டான் காற்றினில் கலந்துவிட்டான் எண்களைச் சுழற்றுகின்றேன்.. எண்ணியது நடக்குமா? எடுத்து அவன் பேசுவானா? செவிகள் இன்னும் மறக்கவில்லை சென்றவனின் குரல் ஒலியை தொலைந்த அவன் உடலினைப்போல் அவன் குரலும் தொலைந்ததுவோ

Continue Reading

மதம் (6.10.2003)

அ) கவிதைகள்

மதம் பிடித்த மனிதனுக்கு மனதின் வலியும் புரியுமோ? மகாத்மாக்கள் பெற்ற மண்ணில் மானுடம்தான் தோற்குமோ? வியர்வை மழையில் விளைந்த பயிரை குருதி வெள்ளம் அழிக்குமோ ஒற்றுமையில் உயர்ந்த மண்ணை வேற்றுமை நீர் அரிக்குமோ? புல்லுருவிகல் புகுந்து நம்முள் புதிய குழப்பம் விளைக்குமோ? ஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம் உரக்கச் சிரித்து மகிழுமோ? அன்னை மடியில் அமர்ந்து கொண்டே அவளுக்கிங்கு துரோகமோ? மகவிரண்டை மோதவிட்டே வாழ்வதுதான் மானமோ? இன்றும் நமக்கு ஓருயிர்தான் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததோ? உதிர வெள்ளம் …

Continue Reading

மரணம் (25-01-03)

அ) கவிதைகள்

மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு …

Continue Reading

போதை அரக்கன்

அ) கவிதைகள்

அந்தோ எரிகிறதே அடிமனமும் பதறியதே பிஞ்சின் நிலையறிந்து பேதைமனம் துடிக்கிறதே பிஞ்சுகள் அறிந்திடாது தீதுயாது புரிந்திடாது நஞ்சினை கொடுத்தழிக்கும் வஞ்சகரை தெரிந்திடாது வந்தார் வாழவைப்போம் வினைகளினை தூரவைப்போம் பண்பாடு போற்றிடுவோம் சந்ததியைக் காத்திடுவோம் பிள்ளைகள் தேடிவரும் பெரும்பகையை நாமழிபோம்

Continue Reading

இழப்பு (29.11.02)

அ) கவிதைகள்

இல்லை என்று சொல்லிவிட்டால் இந்த துன்பம் என்றுமில்லை இதோ என்று தந்துவிட்டு திரும்பக் கேட்டல் நியாயமாமோ? உந்தன் அன்பு என்னவென்று அறிந்திடாமல் நானிருந்தேன் அறிந்துகொள்ள வைத்துவிட்டு விலகிக்கொள்ளல் நியாயமாமோ? கண்ணிழந்து இருந்தபோது காட்சியாது அறிந்திடேன் நான் ஒளிகொடுத்து உணரவைத்து இன்று பிடுங்குவதேன் உயிரையும் சேர்த்து இல்லையென்றே இருந்திருந்தால் இந்த துன்பம் என்றுமில்லை பெற்றிழந்த வலியின் கொடுமை உனக்கு மட்டும் இல்லையா என்ன?

Continue Reading