கடலின் தாகம்..

அ) கவிதைகள்

பித்துப் பிடித்தன்ன போடி!! பிணம் வந்துக் குவிவது கண்டு திசை எட்டெங்கும் நீர் கண்டபோதும் எமன் தாகமடங்கலை போடி!!! பிஞ்சு உயிர்களைக் கொண்டான் பல வண்ணக் கனவுகள் கொன்றான் தாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான் இன்னும் என்னென்னவோ துயர் செய்தான் கடல் பொங்கின வேகம் கண்டாயோ? கரை தின்றதன் சோகம் கண்டாயோ? என்னென்று ஏதென்று சொல்வேன் மனம் பித்துப் பிடித்தது போடி

Continue Reading

கடல்

அ) கவிதைகள்

கத்தும் கடல் சத்தம் அது எட்டும் திசை எட்டும் நித்தம் அதன் மட்டம் தனில் யுத்தம் உயிர் யுத்தம் விண்ணும் ஒளிக் கண்ணும் அதில் மின்னும் அலை மின்னும் பொன்னோ இது பொன்னோ என எண்ணும் விழி எண்ணும் பாடும் கடல் ஆடும் அதில் ஓடம் ஜதி போடும் தேடும் வலை தேடும் அதில் வாடும் உயிர் ஓடும் கொல்லும் பகல் கொல்லும் அதை வெல்லும் கலம் வெல்லும் செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்) சொல்லும் …

Continue Reading