கோக்

அ) கவிதைகள்

அனுதினமும் உறிஞ்சியதால் காலியானது நிலத்தடி நீர் [இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது. என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]

Continue Reading

எல்லோரும் இப்படித்தானா

அ) கவிதைகள்

மெய்யோ பொய்யோ அழகிய செடியின் இலைகள் நகம் தீண்டிய தழும்பேந்தி… **************** நண்பர்களே, நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்…. கையலம்பும் இடமருகில் கண்கவர் செடியொன்று மெய்யோ என்றறிந்திடவே இலையொன்றை ஸ்பரிசித்தேன் பாவம் அது…. பல்வேறு நகம் தீண்டி உடல்முழுதும் தழும்புகளாய்.. இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை. எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.

Continue Reading

காலம்

அ) கவிதைகள்

வட்டத்தினுள் சதுரத்தை புகுத்திவிட நினைத்தேன் ஆனால் இன்று வட்டமே சதுரமாய் *** புத்தம் புது சில்லறையா சேர்த்து வச்சும் வீணாச்சே.. செல்லாக் காசு *** கல்மனசும் கரையுமின்னு கால் கடுக்க காத்திருந்தேன்.. கரைந்தது.. காலம்

Continue Reading

தினக்கூலி

அ) கவிதைகள்

பாலம் கட்டும் பணி.. இரும்புக் கால்களினூடே நிலைத்த மனிதக் கால்கள் இரண்டுக்கும் பேதமில்லை நின்றால்தான் வாழும் நலிந்தால் அழிந்துவிடும்..

Continue Reading