சிப்பியென இமை மூடி..

அ) கவிதைகள்

சிப்பியென இமை மூடி செவ்விதழில் முகை சூடி சிகை வருடும் பிறை நுதலில் சிந்தை கவர் கண்ணே நான் சூல்கொண்ட நன்முத்தே என் இதழ்சூடும் புன்னகையே செப்புகிறேன் என் வாக்கை சிந்தையில் சேர் கண்ணே மூவிரண்டு வயதில் நீ முன்னூறு கதை படிப்பாய் நாலிரண்டு வயதில் நீ நன்மை பல கற்றிடுவாய் ஏழிரண்டு வயதில் நீ ஏற்றங்கள் பெற்றிடுவாய் எண்ணிரண்டு வயதில் நீ எழில் நிலவை எட்டிடுவாய் கண்ணிரண்டு துணைகொண்டு கசடற நீ உயர்ந்திடுவாய் எம்மிரண்டு உயிர் …

Continue Reading

வாழும் முறைமை எது?

அ) கவிதைகள்

விழி மூடித் திறக்கும் முன்னே மூவிரண்டு வயதாம் உனக்கு பட்டுப் பிள்ளை உன்னை – நான் பாடாய்ப் படுத்துகின்றேன் துள்ளி விளையாடும் போதில் துயில் கொள்ளத் துரத்துகின்றேன் பஞ்சு போல் உறங்கும் பொழுதோ பள்ளி செல்ல எழுப்புகின்றேன் மணியான உன்னைக் கிளப்ப மணி காட்டிப் பணிகள் சொல்வேன் உடைமாற்றி தலைசீவி உணவுண்டு ஒரே நேரம் எத்தனைச் செய்வாய்? பரபரப்பில் பாலைத் துறந்து பறந்து போவாய் பேருந்துக்கு பசிக்குமோ என்னவோ என்று பரிதவித்துக் காத்துக் கிடப்பேன்.. மயில் போல …

Continue Reading

கண்ணாமூச்சி..

அ) கவிதைகள்

நீ வழக்கமாக ஒளியுமிடம் தெரியாதா எனக்கு?? ஆனாலும்… வீடு முழுதும் தேடி அலைவேன்.. ‘த்த்தோ நிமி’ என்று தலைக்காட்டி நீ சிரிக்கும் அழகில் கரைய.. oOo சும்மாவேனும் கையில் முகம்புதைத்து அழுதுகொண்டிருப்பேன் ‘அம்மா’ என்றணைத்தபடி என் முகம்நோக்கும் உன் அழகுவிழிகளின் அன்பொளியில் நனைய..

Continue Reading

அழகுக்குட்டி நிவிம்மா..

அ) கவிதைகள்

ஏ நிலவே.. வேடிக்கை போதும் என் செல்ல மகள் இப்பொழுது தான் கண்ணயர்ந்தாள் முகிலிடை மூழ்கிடு.. நின் ஒளிக்கரங்களால் வருடி வருடி அவளின் துயில் கலைத்து விடாதே ஆசை மிகின் தென்றலின் துணையொடு அவ்வப்பொழுது முகில் விலக்கி அவள் தூங்கும் அழகை இரசித்துக் கொண்டிரு என்னைப் போல்..

Continue Reading

உறங்கும் என் கவிதை

அ) கவிதைகள்

ஓயாத வேலை உன் பின்னே ஓட்டம் விளையாடும் நேரமெல்லாம் உன் வயதேதான் எனக்கும் காலை முதல் கனவு வரை ஏதேதோ எண்ணங்கள் குறிஞ்சியாய் பூக்கும் ஓரிரு கவிதைகளும் உயிர்பிக்க முடியாமல் ஓரத்தில் உறங்கிப்போகும் எங்கே தொலைந்துபோனேன்?? மீண்டும் கிடைப்பேனா?? எனக்கே எனக்கான நேரமும் கிடைக்குமா? இன்று கிடைத்தது நான் தேடும் என் நேரம் அப்பொழுதும்… உள்ளுக்குள் உறங்கும் கவிதையை எழுப்பாமல்.. வாய் குவித்து விரல் அசைத்து சிரித்து சிணுங்கி பதுமைபோல் உறங்கும் கவிதையான உன்னை இரசிக்கின்றேன் என்னவென்று …

Continue Reading

மாற்றம்

அ) கவிதைகள்

காலமகள் கொடியசைப்பில் கடந்தது பல ஆண்டு அன்பு நட்பு பாசம் கொண்டு கண்ட காட்சி கேட்ட சொற்கள் இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு அன்று கண்ட மக்கள் மட்டும் காணவில்லை மாறிப்போனார் காலச்சுழலில் வேறு ஆனார் மாற்றம் மட்டும் உண்மையென்றால் அன்பும்கூட பொய்மைதானோ? பழைய வாசம் தேடும் மனதே புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய் வாழும் காலம் வேறு காலம்.

Continue Reading

நான் வளர்கிறேனே அம்மா

அ) கவிதைகள்

தண்ணீரில் தொலைபேசி தரையெங்கும் காகிதங்கள் மங்கள நீராடியதில் மோட்சத்தில் மடிக்கணிணி பூசைக்கு படைக்கும் பொருள் முடியும்வரை இருப்பதில்லை தேடும் பொருள் கிடைப்பதில்லை போன இடம் தெரிவதில்லை நொடிப்பொழுது அசட்டைக்கு கைக்கூலி சேதாரம் அத்தனையும் புலம்பலல்ல இரசித்து சுவைத்து சிரித்தவைதான் கவிதை எழுத உட்கார்ந்தால் காலைக்கட்டி முகம்நோக்கி தளர் நடையில் கிளர் மொழியில் கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும் கொள்ளை கொண்ட மகள் செயல்தான் சந்திப்போம் கீதா

Continue Reading

ஒரு தேவதை வந்துவிட்டாள்

ஏ) இது நம்ம ஏரியா

அக்டோபர் 25, 2006 எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்.. நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள் வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி அன்புடன் கீதா

Continue Reading