கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

அம்மா..

Filed under அ) கவிதைகள் by கீதா

உன் மடியில் உறங்கி
நீ ஊட்ட உண்டு
உன் வசவில் சிணுங்கி
உடன் பிறப்போடலைந்து
உனை ஏய்த்து மகிழ்ந்து
சின்னவளாகவே இருந்திருந்தால்..

சுற்றங்களை விடுத்து
மணமொன்று புரிந்து
மறுதேசம் நுழைந்து
நிதமும் உனைத்தேடி
நினைவினில் நீராடி
ஏங்காது இருந்திருப்பேன்.

Trackback URI | Comments RSS

Leave a Reply