கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

மனிதம் எங்கே?

Filed under அ) கவிதைகள் by admin

ஏதோ விவரங்கள் தேடி
ஏடுகள் புரட்டிக் கொண்டிருந்தேன்
சிக்கின புகைப்படம் இரண்டு
சிதைத்தன மனதினை கொன்று

பட்டினிச் சாவின் நிலத்தில்
பச்சிளங் குழந்தையின் தவிப்பை
கழுகினுக்கு இரையாம் முன்னர்
கவனமாய் படம் பிடித்திருந்தர்

செந்நிறக் கனியின் விழாவில்
சிக்கிய மங்கையைக் களிப்பில்
போதையின் மாக்கள் கொண்டாட
பொறுமையாய் படம் பிடித்திருந்தர்

கழுகினை விரட்டவும் இல்லை
காத்திடும் எண்ணமும் இல்லை
மனதின் தேடலில் இனிமேல்
மனிதமும் சேர்த்திடலாமோ?

No responses yet

Trackback URI | Comments RSS

Leave a Reply