கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

இழப்பு (29.11.02)

Filed under அ) கவிதைகள் by admin

இல்லை என்று சொல்லிவிட்டால்
இந்த துன்பம் என்றுமில்லை
இதோ என்று தந்துவிட்டு
திரும்பக் கேட்டல் நியாயமாமோ?

உந்தன் அன்பு என்னவென்று
அறிந்திடாமல் நானிருந்தேன்
அறிந்துகொள்ள வைத்துவிட்டு
விலகிக்கொள்ளல் நியாயமாமோ?

கண்ணிழந்து இருந்தபோது
காட்சியாது அறிந்திடேன் நான்
ஒளிகொடுத்து உணரவைத்து இன்று
பிடுங்குவதேன் உயிரையும் சேர்த்து

இல்லையென்றே இருந்திருந்தால்
இந்த துன்பம் என்றுமில்லை
பெற்றிழந்த வலியின் கொடுமை
உனக்கு மட்டும் இல்லையா என்ன?

No responses yet

Trackback URI | Comments RSS

Leave a Reply