கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

பிரிதல்

Filed under அ) கவிதைகள் by கீதா

அஷ்டமியா? - ஆகாது
தேய்பிறையா? - கூடாது
இராப்பொழுதா? - வேண்டாமே

எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்

ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்

உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்

எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை

Trackback URI | Comments RSS

Leave a Reply