கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

கனவுலகம்

Filed under இ) வெண்பா முயற்சி by கீதா

கனவுலகில் காண்பதுவோ கற்பனைப் பூக்கள்
நனவுலகோ முட்களுடன் நித்தம் - நனவின்
மனவுலகில் மங்கையிவள் ஏற்றிடும் தீபம்
கனவென்றா கும்முன்னே காண்.

விளக்கம்:
கனவில், கற்பனையில் நாம் காண்பது இனிப்பான மனதிற்கு உவகை தரும் நிகழ்வுகளை. ஆனால் நிஜம் அதற்கு அப்பாற்பட்டது. நிஜம் எப்பொழுதும் நமக்கு பூக்களாக இருப்பதில்லை முட்களாக தைக்கவும் செய்யும்.
ஒரு மங்கை தன் கற்பனையில் தன் தலைவனுக்கு மாலை சூட்டி மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சி பொய் என்று ஆகும் முன்னர் தன்னைக் காண தன் தலைவனை அழைக்கிறாள்.

கனவுலகம் - கற்பனை/கனவு
நனவுலகம் - நிஜம்
மனவுலகம் - மனதில் நினைக்கும் நினைவு

தலைவன் - இறைவன் எனவும் பொருள் படும்

2 Responses to “கனவுலகம்”

  1. 1 Thottarayaswamyon 07 Dec 2006 at 8:59 am

    மிக அருமை. வாழ்த்துக்கள்

  2. 2 ramananon 19 Dec 2006 at 12:57 am

    these are good..
    :-)

Trackback URI | Comments RSS

Leave a Reply