Oct062006
நாய்ப்பொழப்பு
Filed under அ) கவிதைகள் by கீதா
அலுக்காமல் படிகள் ஏறி
அலுவலகக் கதவு தட்டி
நயமாக கதைகள் சொல்லி
நம்பியிதை வாங்கும் என்றால்
வேலைகளை விட்டு விட்டு
கதைமுழுதும் கேட்டபின்னர்
கதவின் வழி காட்டிடுவர்..
இதுவேணும் பரவாயில்லை..
சரளமான ஆங்கிலத்தில்
சடுதியிலே பேசக்கண்டு
நடுக்கமுற்று இன்னும்சிலர்
யாசகனைத் துரத்துதலாய்
வாசலிலே நிற்கவைத்து
வந்தவழி அனுப்பிடுவர்
இதுவேணும் பரவாயில்லை
வீதியிலே அலைந்ததாலோ?
பேசிப் பேசித் திரிந்ததாலோ?
கலக்கமுற்று இன்னும்சிலர்
வாசலிலே எழுதிவைப்பர்
“நாய்கள் ஜாக்கிரதை”
&
“சேல்ஸ்மேன் நாட் அலவுட்”

1 tamizhppiriyanon 06 Dec 2006 at 1:30 pm
kavithai arumai!…vaazthukkal..
enna panrathunga, salesman na avalu elakarama pochu..avanga padra kashtam paaka paavama irukkum
2 saravananon 06 Dec 2006 at 1:51 pm
விற்பனை பிரதிநிதிகளின் சோகம் சொல்லு்ம் அழகான கவி்தை…வாழ்த்துக்கள்..
3 இராம. வயிரவன்on 13 Dec 2006 at 7:54 am
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
4 கீதாon 15 May 2008 at 10:05 am
கருத்துக்கு நன்றி நண்பர்களே