Feb022005
ஒன்றுமில்லை
Filed under அ) கவிதைகள் by கீதா
ஆம் நண்பா..
மறைந்த உன்
நினைவுகளைத் தவிற
வேறொன்றும் இல்லை
மறைந்த உன்
நினைவுகளைத் தவிற
வேறொன்றும் இல்லை
விபத்தில் சிக்கியதும்
வலியில் வாடியதும்
நீ மட்டும் இல்லை..
என் மனதும் தான்
வேதனைப் பூக்களை
வார்த்தையில் கோர்த்தேன்
மனதினுள் பூட்டிவைத்தேன்
அது உனக்கேயானது
தவழ்ந்து வருவது
மாலையின் வாசமான
உன் நினைவுகள் மட்டுமே
வேறொன்றும் இல்லை..
