Oct062006
அவரவர் உலகம்
Filed under அ) கவிதைகள் by admin
உலகையே சுமப்பதுபோல்
பையினைத் தலையில் சுமந்தபடி
வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும்
விந்தையான ஒரு பெண்மணி..
வியாழக் கிழமை தோறும்
விதிபோலத் தவறிடாமல்
‘முருகா’ என்று அழைத்தபடி
யாசகம் கேட்கும் ஒரு தாத்தா..
ஒய்ந்த கால்களின் உதவியின்றி
உடைந்து போன சக்கரங்களை
கைகளின் உதவியில் ஓட்டியபடி
ஓயாமல் பயணிக்கும் தாத்தா..
எங்கு போவர்? என்ன செய்வர்?
இவர்களின் உலகத்தில் ஒரேநாள்
சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான்
ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..
1 subburathinamon 27 Mar 2009 at 11:30 am
புதிய ஷூ வாங்கித்தான் ஆகவேண்டும் என நச்சரித்த சிறுவன்
காலில்லாதவனின் கதியைப் பார்த்து உளம் நெகிழ்ந்த கதை
நினைவுக்கு வருகிறது.
சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, யூ.எஸ்.ஏ.