Oct062006
கோவம்
Filed under அ) கவிதைகள் by admin
எங்கிருந்து வந்தனையோ
எங்கு சென்றனையோ
தவம் செய்யவில்லை நான்
தானாக வந்தாய் நீ
வழியனுப்பவில்லை நான்
வந்தவழி சென்றாய் நீ
வந்த சில நாழிகையில்
என்வசத்தில் நானில்லை
வசவுமொழி கேட்டனரோ
வாயடைத்து நின்றனரோ?
கடும்பார்வை கண்டனரோ
கண் கலங்கிச் சென்றனரோ??
என்னை நீ ட்கொள்ள
எங்கே நான் சென்றுவிட்டேன்
என் சிரத்தில் நீயேற
உன் அடிமை ஆனேனோ?
என் உடமை நீயில்லை
என்னை நீ விட்டுவிடு
வாராமல் நீ இருந்தால்
வாயில்ல பூச்சிதான் நான்
ஆனால்..
வாழவேண்டும் நானும்தான்
என் அடிமை ஆவதென்றால்
வந்து.. கண்டு.. சென்றுவிடு
1 Vasanthon 14 Oct 2008 at 8:10 am
Romba nalla irrukku,
kobam kattupatuthvaendiyahtu, kobam varum anaal vanthavazhiyae poga vaendum, nallathu
pls read my blog for kavithai and reply pls
http://www.littlebharathi.blogspot.com