கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

மனசாட்சி

Filed under அ) கவிதைகள் by admin

இன்பமும் துன்பமும் உனக்குள்ளே
சிரித்தலும் அழுதலும் அதனாலே

நண்பனும் பகைவனும் உனக்குள்ளே
நன்மையும் தீமையும் அதனாலே

இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே
உயர்தலும் தாழ்தலும் அதனாலே

நட்புக் கரம் கொடுப்பான்
பகையாய் உயிர் எடுப்பான்

இன்பத்தில் திளைக்க வைப்பான்
துன்பத்தில் மூழ்க வைப்பான்

வெறுமையில் வாட வைப்பான்
முழுமையாய் சிரிக்க வைப்பான்

உன்னுள் இருப்பது மனசாட்சி
உயிர் ஓயும் நாள்வரை
ஓயாது அதன் அரசாட்சி.

No responses yet

Trackback URI | Comments RSS

Leave a Reply