Feb022005
மனசாட்சி
Filed under அ) கவிதைகள் by admin
இன்பமும் துன்பமும் உனக்குள்ளே
சிரித்தலும் அழுதலும் அதனாலே
சிரித்தலும் அழுதலும் அதனாலே
நண்பனும் பகைவனும் உனக்குள்ளே
நன்மையும் தீமையும் அதனாலே
இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே
உயர்தலும் தாழ்தலும் அதனாலே
நட்புக் கரம் கொடுப்பான்
பகையாய் உயிர் எடுப்பான்
இன்பத்தில் திளைக்க வைப்பான்
துன்பத்தில் மூழ்க வைப்பான்
வெறுமையில் வாட வைப்பான்
முழுமையாய் சிரிக்க வைப்பான்
உன்னுள் இருப்பது மனசாட்சி
உயிர் ஓயும் நாள்வரை
ஓயாது அதன் அரசாட்சி.