கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

மனசாட்சி

Filed under அ) கவிதைகள் by கீதா

இன்பமும் துன்பமும் உனக்குள்ளே
சிரித்தலும் அழுதலும் அதனாலே

நண்பனும் பகைவனும் உனக்குள்ளே
நன்மையும் தீமையும் அதனாலே

இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே
உயர்தலும் தாழ்தலும் அதனாலே

நட்புக் கரம் கொடுப்பான்
பகையாய் உயிர் எடுப்பான்

இன்பத்தில் திளைக்க வைப்பான்
துன்பத்தில் மூழ்க வைப்பான்

வெறுமையில் வாட வைப்பான்
முழுமையாய் சிரிக்க வைப்பான்

உன்னுள் இருப்பது மனசாட்சி
உயிர் ஓயும் நாள்வரை
ஓயாது அதன் அரசாட்சி.

Trackback URI | Comments RSS

Leave a Reply