கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

நான் நீயில்லை

Filed under அ) கவிதைகள் by கீதா

எனக்குத் தெரிந்தவை
உனக்குத் தெரியாமலும்

எனக்குப் புரிந்தவை
உனக்குப் புரியாமலும்

எனக்குப் பிடித்தவை
உனக்குப் பிடிக்காமலும்

எனக்கு நன்மையானவை
உனக்குத் திமையாகவும்

எனக்குக் கவிதையானவை
உனக்குக் கிறுக்கலாகவும்

எப்படியும் தெரியலாம்..
எல்லாமே சாத்தியம்தான்.

ஏனென்றால்..

எனக்கு ‘நான்’ எனத்தெரிவது
உனக்கு ‘நீ’ எனத்திரிவதால்

Trackback URI | Comments RSS

Leave a Reply