கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

தூவானம்

Filed under அ) கவிதைகள் by கீதா

பொடிப் பொடியாய் விழும்
சர்கரைத் தூரல்

விழிவிரித்து பார்க்கயிலும்
வந்தவழி காணல்

ரோமத்தில் நீ மிதக்க
கண்ணுக்குள் ஜில்லிப்பு

நாவில் விழுந்தவுடன்
நெஞ்சுக்குள் தித்திப்பு

கையில் குடையிருந்தும்
விரிக்க மனமில்லை

நனைத்துதான் செல்லட்டுமே
தடையாயிங்கு குடையுமில்லை

Trackback URI | Comments RSS

Leave a Reply