கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

நானும் நிழலும்

Filed under அ) கவிதைகள் by கீதா

நிழலை பிடிக்கவேண்டி
நானதைத் தொடர்ந்திட்டேன்
தொடர்ந்தே நானும் செல்ல
நிழலும் விலகக் கொள்ள
ஆட்டம் தொடங்கியது
எனக்கும் நிழலுக்குமாய்
இடமும் வலமுமாக
முன்னும் பின்னுமாக
மேலும் கீழுமாக
விலகி நழுவியது
அதனை நானும் கண்டேன்
பல்வேறு வடிவினிலே
நெடிதும் சிறியதுமாய்
சில நொடி மாயமாய்
பிடிக்க இயலவில்லை
சோர்ந்தே நானமர்ந்தேன்
அருகே நிழலும் கண்டு
உணர்ந்தேன் அந்நொடியே
நானும் நிழலும் ஒன்று
இறைவனும் அப்படித்தானோ?

Trackback URI | Comments RSS

Leave a Reply