Oct062006
நட்பு (7.4.2003)
Filed under அ) கவிதைகள் by admin
நட்பென்னும் பாதை தன்னில்
நடக்கின்றேன் பல காதம்
கடக்கின்ற வழி தோறும்
பயில்கின்றேன் பல பாடம்
என்னை நான் உணர்ந்த்துகொள்ள
உதவியதென் நட்பேதான்
என்னை நான் உணர்த்திச்செல்ல
ஊக்கம் தரும் நட்பேதான்
நட்பென்னை வளர்க்கையிலே
நான் பிள்ளை கிப்போனேன்
உருவத்தில் மட்டுமின்றி
உள்ளத்தும் வளருகின்றேன்
நண்பர் சிலர் வருவதுவும்
வந்த சில மறைவதுவும்
நான் கடக்கும் பாதைதன்னில்
காலமும் கடந்து செல்ல..
நிழலுருவம் மறைந்தாலும்
நினைவு என்றும் மாறாது
நட்புடனே நான் நடக்க
நண்பர் என்னைச் சூழ்ந்திருக்க
என் பாதை நீண்டிருக்க
எழில் எங்கும் நிறைந்திருக்க
நடக்கின்றேன் நானும்தான்
நீயும் கூட வா நண்பா
நட்புடனே நடந்திடலாம்
களிப்புடனே நாள்தோறும்..
1 vijayon 27 Apr 2008 at 5:55 am
nice thoughts geetha mom. congrats lot