Oct062006
வட்ட அப்பம் (24.1.2003)
Filed under அ) கவிதைகள் by admin
வட்டமான அப்பமொன்று
வானில் மிதந்து போகுது
எட்ட நின்று பார்ப்பதற்கே
எச்சில் நாக்கில் ஊறுது
எட்டி யாரும் எடுக்கும்முன்னர்
எடுக்க மனசு துடிக்குது
எட்டிப் பார்த்தும் முடியவில்லை
ஏங்கி மனசு தவிக்குது
நின்று நானும் பார்த்துவந்தேன்
நித்தம் அளவு குறையுது
இன்று பார்க்க வந்தபோது
இல்லாமல் அது போனது
எடுத்துச்சென்ற கள்வன் யாரோ
ஏழை மனசு கலங்குது
கண்டு வந்து சொல்வார் யாரோ
கலங்கும் மனசு கேட்குது