Oct062006
அர்த்தங்கள் (21/11/02)
Filed under அ) கவிதைகள் by admin
அன்பெனக்கு நீ அளிக்க
அதையே நான் உனக்களித்தால்
அதிலென்ன ஆனந்தம் உண்டு
நீ கொடுக்கா பொழுதினிலும்
நானுனக்கு தொடர்ந்தளித்தால்
அதுவே உண்மை அன்பென்பது
நலமாக நீ இருந்து
நலமா என்றென்னைக் கேட்டால்
அதிலென்ன ஆறுதல் இருக்கிறது
நலமற்று நீ இருந்தும்
நினைவாக என் நலனைக் கேட்டால்
அதுவன்றோ பிரியம் என்பது
இறந்து நீ சென்றபின்பு
உன் நினைவை பிறர் மறந்தால்
அதிலென்ன பெருமை இருக்கிறது
இறவாத உன் நினைவு
பிறர் மனதில் வீற்றிருந்தால்
அதுதானே வாழ்தல் என்பது.