கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the 'ஈ) கதை கேளு கதை கேளு' Category

ஹி ஹி நான் தான் சொன்னேனே

Posted by கீதா

அது ஒரு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடம்.

அங்கதான் நம்ம கதையின் நாயகன் தற்கொலை செய்துக்க போயிட்டிருந்தான். அவனுக்கு வயசு ஒரு பத்தொன்பது இல்ல இருபது இருக்குமா?.. இருக்கும்… இருக்கும்.

கருகருன்னு மீசை, அலை அலையா தலைமுடி, கண்ணுல சோகத்தையும் மீறின ஒரு குறுகுறுப்பு, வயதுக்கே உரிய ஒரு துடிப்பு.. இவன் ஏன் தற்கொலை செய்துக்கணும்??

புரியாத புதிரா இருக்கே.. ஒரு வேளை காதல் தோல்வியோ?.. இல்லை பரீட்சையில பெயில் ஆகிட்டானோ? ம்ம்.. சேச்சே இதெல்லாம் காரணமா இருக்காது.. வேற என்னவா இருக்கும்..ம்ம்

அடடா யோசிக்கிறதுக்குள்ள நம்ம கதாநாயகன் லிப்ட்ல ஏறி கட்டிடத்தின் உச்சிக்கு போயிட்டான் போல இருக்கே.. தடைசெய்யப்பட்ட பகுதியில யாரோ இருக்காங்கன்னு அலாரம் அடிக்குது..

ஆனாலும் இப்பல்லாம் தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிடுச்சி.. எவ்வளவு சீக்கிரம் உச்சிக்கு போயிட்டான்.. என்ன நடக்குதோ தெரியலை..

உச்சிக்கு வந்தாச்சு. இனி குதிச்சிட வேண்டியதுதான்.

வாட்ச்சைப் பார்த்தான் மணி 3:45 21/21/21

1..2..3…

இதென்ன எல்லா வீட்டுலயும் ஜன்னல் மூடி இருக்காங்க.. அடடா மழை பெய்யுது..

சே ஏன் இப்படி பனி பெய்யுதோ தெரியலையே உடம்பெல்லாம் ஜில்லுனு ஆகிடுச்சி..

அப்பாடி ஒரு வழியா வெயில் காலம் வந்துடுச்சி..

கை காலெல்லாம் தளர்ந்து போன மாதிரி இருக்கு

அடடா கண் பார்வைகூட மங்குது..

என்ன வருஷம் இது.. வாட்சை பார்த்தான் 3:47 21/21/71

அடடா அம்பது வருஷம் ஆகிடுச்சி.. இன்னும் தரையைக் காணோமே.. ஹ்ம்

வீழ்ந்துகொண்டே இருந்தான்

என்ன நடக்குதுன்னு உங்களுக்கும் புரியலையா

தலைப்பையும், முதல் வரியையும் படிங்க

16 responses so far

ஒரு ஜென் கதை

Posted by கீதா

3 responses so far