<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கீதாவின் கிறுக்கல்கள் &#187; அஞ்சலி</title>
	<atom:link href="http://geeths.info/archives/tag/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://geeths.info</link>
	<description>என் எண்ணங்கள் கவிதைகளாய்</description>
	<lastBuildDate>Wed, 08 Dec 2010 17:11:03 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>நினைவாஞ்சலி</title>
		<link>http://geeths.info/archives/213</link>
		<comments>http://geeths.info/archives/213#comments</comments>
		<pubDate>Fri, 05 Nov 2010 05:45:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=213</guid>
		<description><![CDATA[எனது அருமை அக்கா எப்படி முடிந்தது உன்னால் எமை விட்டுச் செல்ல எப்படி முடிந்தது உன்னால் தீபாவளித் திருநாள் இன்று தீபா வலியென்றே உணர்ந்தேன் அலைபேசி தனைக் கொண்டு அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன் உன் எண்ணைக் கடக்குந்தோறும் உள்ளமெல்லாம் பதறுதம்மா&#8230; பொத்திப் பொத்தித் தாளாமல் பொங்கி வரும் சோகத்தை இத்தனை நாள் பேசாத என் கவிதை சொல்லிடுமா? மருதாணிச் சிவப்பை நீ மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே காலன் கொண்டு சென்றானே காலம் பார்த்து வந்தானோ? நீ இல்லை எனும் நினைவே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனது அருமை அக்கா<br />
எப்படி முடிந்தது உன்னால்<br />
எமை விட்டுச் செல்ல<br />
எப்படி முடிந்தது உன்னால்<br />
தீபாவளித் திருநாள் இன்று<br />
<strong>தீபா</strong> வலியென்றே உணர்ந்தேன்<br />
அலைபேசி தனைக் கொண்டு<br />
அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன்<br />
உன் எண்ணைக் கடக்குந்தோறும்<br />
உள்ளமெல்லாம் பதறுதம்மா&#8230;<br />
பொத்திப் பொத்தித் தாளாமல்<br />
பொங்கி வரும் சோகத்தை<br />
இத்தனை நாள் பேசாத<br />
என் கவிதை சொல்லிடுமா?<br />
மருதாணிச் சிவப்பை நீ<br />
மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே<br />
காலன் கொண்டு சென்றானே<br />
காலம் பார்த்து வந்தானோ?<br />
நீ இல்லை எனும் நினைவே<br />
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யோ<br />
வலி சிக்கிய தொண்டை<br />
விழுங்கிடுமா சோகத்தை?<br />
கண்களில் திரளும் நீர்<br />
கரைத்திடுமா காயத்தை??<br />
நீங்காத உன் நினைவை<br />
நெஞ்சமெங்கும் சுமந்திருந்தும்<br />
நீயில்லாத வெற்றிடத்தை<br />
நிரப்பும் வழி ஏதும் உண்டோ??</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/213/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>மலர்வளையம்</title>
		<link>http://geeths.info/archives/147</link>
		<comments>http://geeths.info/archives/147#comments</comments>
		<pubDate>Wed, 14 May 2008 03:11:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=147</guid>
		<description><![CDATA[நினைவஞ்சலி எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது எதிர்பாராக் கொடுமைகள் கண்ணெதிரே கண்டவுயிர் கணப்பொழுதில் காலனோடு விழியோரம் தொக்கிநிற்கும் விழிநீரும் உணர்த்திச்செல்லும் வேரினை பிடுங்கிச் சென்ற வேதனை உரக்கச் சொல்லும் வலிகொண்ட மனதிற்கு மருந்தென்ன? மாற்றென்ன? விழிமூடிக் கிடந்தாலும் விட்டத்தை முறைத்தாலும் வார்த்தைகள் விலகிநிற்கும் வலியினை உணர்த்துதற்கு வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும் விழிக்கருவில் வடு போல விலகாமல் என்றென்றும்..]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/ninaivanjali.jpg" alt="நினைவஞ்சலி" /><br />
<strong>நினைவஞ்சலி</strong></p>
<p>எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது<br />
எதிர்பாராக் கொடுமைகள்<br />
கண்ணெதிரே கண்டவுயிர்<br />
கணப்பொழுதில் காலனோடு<br />
விழியோரம் தொக்கிநிற்கும்<br />
விழிநீரும் உணர்த்திச்செல்லும்<br />
வேரினை பிடுங்கிச் சென்ற<br />
வேதனை உரக்கச் சொல்லும்<br />
வலிகொண்ட மனதிற்கு<br />
மருந்தென்ன? மாற்றென்ன?<br />
விழிமூடிக் கிடந்தாலும்<br />
விட்டத்தை முறைத்தாலும்<br />
வார்த்தைகள் விலகிநிற்கும்<br />
வலியினை உணர்த்துதற்கு<br />
வருடங்கள் உருண்டாலும்<br />
வலியின் வாசம் மட்டும்<br />
விழிக்கருவில் வடு போல<br />
விலகாமல் என்றென்றும்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/147/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>மரணம் (25-01-03)</title>
		<link>http://geeths.info/archives/86</link>
		<comments>http://geeths.info/archives/86#comments</comments>
		<pubDate>Fri, 06 Oct 2006 17:07:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/86</guid>
		<description><![CDATA[மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மரணம்<br />
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்<br />
துக்கங்கள் தொடுவதில்லை<br />
தூக்கமும் கலைவதில்லை<br />
துடிக்க மறுத்த இதயத்தால்<br />
துடித்ததென்னவோ நாங்கள் தான்</p>
<p>மரணம்<br />
மறுக்க இயலாத மலர்மாலை<br />
வேண்டிச் நின்றால் வருவதில்லை<br />
வந்தபின்னர் செல்வதில்லை<br />
தேடிச்சென்றால் பெருமையில்லை<br />
தேடிவந்தால் வரவேற்புமில்லை</p>
<p>மரணம்<br />
சலனம் இல்லாத சாந்தநிலை<br />
இன்ப துன்பம் தெரிவதில்லை<br />
இழப்பும் உனக்கு புரிவதில்லை<br />
மண்ணில் வாழும் காலம் முடிய<br />
மனிதம் அற்றுபோகும் நிலை</p>
<p>மரணம்<br />
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை<br />
மனித உடல் தேவையில்லை<br />
மண்ணில் இனி வாழ்வதற்கு<br />
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்<br />
மீண்டும் மாற்ற முடிவதில்லை</p>
<p>மரணம்<br />
அழைப்பின்றி வரும் விருந்தாளி<br />
வரும் நேரம் தெரிவதில்லை<br />
வந்த கோலம் புரிவதில்லை<br />
போகச் சொல்ல முடிவதில்லை<br />
போன உயிரும் மீள்வதில்லை</p>
<p>மரணம்<br />
மரித்துப் போவதில்லை<br />
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்<br />
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்<br />
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்<br />
மரணம்<br />
மரிப்பதில்லை நினைவுகள்<br />
மறக்கவில்லை உறவுகள்<br />
முடியவில்லை வார்த்தைகள்<br />
முடிவில்லாத கனவுகள்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/86/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

