Mar012005
Posted by admin
அந்தோ எரிகிறதே
அடிமனமும் பதறியதே
பிஞ்சின் நிலையறிந்து
பேதைமனம் துடிக்கிறதே
பிஞ்சுகள் அறிந்திடாது
தீதுயாது புரிந்திடாது
நஞ்சினை கொடுத்தழிக்கும்
வஞ்சகரை தெரிந்திடாது
வந்தார் வாழவைப்போம்
வினைகளினை தூரவைப்போம்
பண்பாடு போற்றிடுவோம்
சந்ததியைக் காத்திடுவோம்
பிள்ளைகள் தேடிவரும்
பெரும்பகையை நாமழிபோம்
No responses yet
Dec182004
Posted by admin
ஏதோ விவரங்கள் தேடி
ஏடுகள் புரட்டிக் கொண்டிருந்தேன்
சிக்கின புகைப்படம் இரண்டு
சிதைத்தன மனதினை கொன்று
பட்டினிச் சாவின் நிலத்தில்
பச்சிளங் குழந்தையின் தவிப்பை
கழுகினுக்கு இரையாம் முன்னர்
கவனமாய் படம் பிடித்திருந்தர்
செந்நிறக் கனியின் விழாவில்
சிக்கிய மங்கையைக் களிப்பில்
போதையின் மாக்கள் கொண்டாட
பொறுமையாய் படம் பிடித்திருந்தர்
கழுகினை விரட்டவும் இல்லை
காத்திடும் எண்ணமும் இல்லை
மனதின் தேடலில் இனிமேல்
மனிதமும் சேர்த்திடலாமோ?
No responses yet