Oct062006
Posted by கீதா
எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா?
ஒரு இடத்துல படிச்சேன்..
Ant Philosophy
1. Never Quit - Find a way or make it.
2. Think ahead - Ants think winter all summer
3. Think Positive - Ants think summer all winter
4. Do what all you can
அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்..
எறும்பு சொல்லும் பாடம்
மேலேறி கீழிறங்கி
முன்சென்று பின்சென்று
ஏதோ ஒரு வழி தேடி
இலக்கடைவோம் வா தோழா
இன்பக்காலம் முடிந்துவிடும்
துன்பம் கையை அசைத்துவரும்
உணர்ந்ததனை எதிர்கொள்ள
வலிமைசெய்வோம் வா தோழா
இந்த காலம் கடந்துபோகும்
இனிய வாய்ப்பும் தேடிவரும்
முதல் கதிரை வரவேற்க
காத்திருப்போம் வா தோழா
வேலையென்ன அறிந்தபின்பு
கவனம் முழுதும் அதில்செலுத்தி
முடியுமட்டும் உழைத்திடுவோம்
முன்னேறிட வா தோழா
எறும்பு சொல்லும் பாடமிது
கேட்டிடுவாய் என் தோழா
இன்னும் இன்னும் தேவையெனில்
கற்றுக்கொள்ள வா தோழா..
No responses yet
Oct062006
Posted by கீதா
கையில் கிடைக்காத
மனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்
கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்
புவியில் மனித இனம்
மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்று
தேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்
புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்
வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்
எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்
கண்டான் சிறந்த இடம்
மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்
தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்
வாழ்வின் அர்த்தம் புரியும்
கதையும் முடிந்தது அங்கே
தேடல் துவங்கிடும் இங்கே
2 responses so far
Oct062006
Posted by கீதா
நிழலை பிடிக்கவேண்டி
நானதைத் தொடர்ந்திட்டேன்
தொடர்ந்தே நானும் செல்ல
நிழலும் விலகக் கொள்ள
ஆட்டம் தொடங்கியது
எனக்கும் நிழலுக்குமாய்
இடமும் வலமுமாக
முன்னும் பின்னுமாக
மேலும் கீழுமாக
விலகி நழுவியது
அதனை நானும் கண்டேன்
பல்வேறு வடிவினிலே
நெடிதும் சிறியதுமாய்
சில நொடி மாயமாய்
பிடிக்க இயலவில்லை
சோர்ந்தே நானமர்ந்தேன்
அருகே நிழலும் கண்டு
உணர்ந்தேன் அந்நொடியே
நானும் நிழலும் ஒன்று
இறைவனும் அப்படித்தானோ?
No responses yet
Oct062006
Posted by கீதா
உள்ளத்தின் உணர்வுகள்
உருக்கமான் நினைவுகள்
வார்த்தையாய் வருகையில்
வாழ்த்துவர் கவிதையென.
One response so far
Oct062006
Posted by கீதா
அன்பெனக்கு நீ அளிக்க
அதையே நான் உனக்களித்தால்
அதிலென்ன ஆனந்தம் உண்டு
நீ கொடுக்கா பொழுதினிலும்
நானுனக்கு தொடர்ந்தளித்தால்
அதுவே உண்மை அன்பென்பது
நலமாக நீ இருந்து
நலமா என்றென்னைக் கேட்டால்
அதிலென்ன ஆறுதல் இருக்கிறது
நலமற்று நீ இருந்தும்
நினைவாக என் நலனைக் கேட்டால்
அதுவன்றோ பிரியம் என்பது
இறந்து நீ சென்றபின்பு
உன் நினைவை பிறர் மறந்தால்
அதிலென்ன பெருமை இருக்கிறது
இறவாத உன் நினைவு
பிறர் மனதில் வீற்றிருந்தால்
அதுதானே வாழ்தல் என்பது.
No responses yet
Feb142006
Posted by கீதா
மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்
ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்
வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்
மனிதனாய் இரு
மகான் ஆவாய்
அன்பாய் இரு
உலகை ஆள்வாய்
No responses yet
Mar012005
Posted by கீதா
நீலம் பச்சையென்று
நித்தமொரு நிறம் பூட்டி
நீந்தவிட்டேன் வார்த்தைகளை
உருவில் மாற்றமுண்டு
உட்பொருளோ மாறவில்லை
உள்ளம் உயர்ந்திருக்க
ஊணுடம்பு தடையுமில்லை..
உட்பொருள் சரிசமமே
உண்மையிதை உணர்ந்திடுவாய்
No responses yet
Feb212005
Posted by கீதா
கையில் கிடைக்காத
மனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்
கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்
புவியில் மனித இனம்
மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்று
தேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்
புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்
வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்
எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்
கண்டான் சிறந்த இடம்
மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்
தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்
வாழ்வின் காரணம் புரியும்
கதையும் முடிந்தது அங்கே
தேடல் துவங்கிடும் இங்கே
No responses yet
Dec312004
Posted by கீதா
இருட்டில் இருப்பவனுக்கு தான்
வெளிச்சத்தின் அருமை தெரியும்
ஆனால் வெளிச்சத்திற்கு வந்ததும்
அது மறந்துவிடுகிறது அவனுக்கு
No responses yet