<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கீதாவின் கிறுக்கல்கள் &#187; நட்பு</title>
	<atom:link href="http://geeths.info/archives/tag/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://geeths.info</link>
	<description>என் எண்ணங்கள் கவிதைகளாய்</description>
	<lastBuildDate>Wed, 08 Dec 2010 17:11:03 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>தொலைந்து போன(வர்கள்)வைகள்..1</title>
		<link>http://geeths.info/archives/56</link>
		<comments>http://geeths.info/archives/56#comments</comments>
		<pubDate>Fri, 06 Oct 2006 17:32:29 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/56</guid>
		<description><![CDATA[என்றோ ஒருநாள் ஏதோவொரு காகிதத்தில் அவசரமாக கிறுக்கிவைத்த நண்பனின் தொலைபேசியெண் காணக்கிடைத்தது இன்று காலங்களை வென்று கண்ணீர் பரிசென தந்து.. தொலைபேசி இருக்கலாம் பேசியவன் தொலைந்துவிட்டான் காற்றினில் கலந்துவிட்டான் எண்களைச் சுழற்றுகின்றேன்.. எண்ணியது நடக்குமா? எடுத்து அவன் பேசுவானா? செவிகள் இன்னும் மறக்கவில்லை சென்றவனின் குரல் ஒலியை தொலைந்த அவன் உடலினைப்போல் அவன் குரலும் தொலைந்ததுவோ]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்றோ ஒருநாள்<br />
ஏதோவொரு காகிதத்தில்<br />
அவசரமாக கிறுக்கிவைத்த<br />
நண்பனின் தொலைபேசியெண்<br />
காணக்கிடைத்தது இன்று<br />
காலங்களை வென்று<br />
கண்ணீர் பரிசென தந்து..<br />
தொலைபேசி இருக்கலாம்<br />
பேசியவன் தொலைந்துவிட்டான்<br />
காற்றினில் கலந்துவிட்டான்<br />
எண்களைச் சுழற்றுகின்றேன்..<br />
எண்ணியது நடக்குமா?<br />
எடுத்து அவன் பேசுவானா?<br />
செவிகள் இன்னும் மறக்கவில்லை<br />
சென்றவனின் குரல் ஒலியை<br />
தொலைந்த அவன் உடலினைப்போல்<br />
அவன் குரலும் தொலைந்ததுவோ</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/56/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நினைவுச் சுரங்கம்</title>
		<link>http://geeths.info/archives/65</link>
		<comments>http://geeths.info/archives/65#comments</comments>
		<pubDate>Fri, 06 Oct 2006 17:30:11 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/65</guid>
		<description><![CDATA[நட்பின் கையொப்பம் தாங்கிய விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட பூக்களின் காய்ந்த துணுக்குகள் வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள் தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த அக்கா மகளின் அழகுக்கிறுக்கல் வீதியிலே கண்டெடுத்த காகிதம் கசங்கியும் கம்பீரமாய் பாரதி அன்பாய் அண்ணன் அனுப்பிய சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை புத்தகம் அனுப்புமாறு வேண்டி ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை நட்பிற்கு அனுப்பிய பரிசினை கொண்டுசேர்த்தமைக்கான இரசீது சுதந்திர தினம்தோறும் பிரியமாய் சேகரித்துவைத்த தேசியக்கொடிகள் தொலைத்துவிட்ட தோழி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நட்பின் கையொப்பம் தாங்கிய<br />
விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு<br />
பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட<br />
பூக்களின் காய்ந்த துணுக்குகள்<br />
வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட<br />
நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள்<br />
தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த<br />
அக்கா மகளின் அழகுக்கிறுக்கல்<br />
வீதியிலே கண்டெடுத்த காகிதம்<br />
கசங்கியும் கம்பீரமாய் பாரதி<br />
அன்பாய் அண்ணன் அனுப்பிய<br />
சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை<br />
புத்தகம் அனுப்புமாறு வேண்டி<br />
ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை<br />
நட்பிற்கு அனுப்பிய பரிசினை<br />
கொண்டுசேர்த்தமைக்கான இரசீது<br />
சுதந்திர தினம்தோறும் பிரியமாய்<br />
சேகரித்துவைத்த தேசியக்கொடிகள்<br />
தொலைத்துவிட்ட தோழி அனுப்பிய<br />
முகவரி அறியமுடியா கடிதம்<br />
சிதறிப்போன நண்பர் குழாமுடன்<br />
சேர்ந்தெடுத்த புகைப்படங்கள்<br />
துவங்கியது ஒழுங்குபடுத்தவாய்த்தான்<br />
புதைந்ததென்னவோ நினைவுச் சுரங்கத்தில்<br />
இன்னும் இன்னும் இனி(ரு)க்கிறது<br />
இவை வெறும் நினைவுகளல்ல<br />
நான் வாழ்ந்துவந்த வாழ்க்கை</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/65/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தொலைந்த கனவு</title>
		<link>http://geeths.info/archives/71</link>
		<comments>http://geeths.info/archives/71#comments</comments>
		<pubDate>Fri, 06 Oct 2006 17:29:35 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/71</guid>
		<description><![CDATA[விளையாட்டாய்க் கோவில் கட்டி வீடுதோரும் அறிக்கை ஒட்டி பொத்தி பொத்தி சேர்த்த காசில் பொங்க வைத்தோம் ஆண்டு தோரும் எனக்கென ஒரு கூட்டம் எதிரணியும் ஒரு கூட்டம் இருவேறு முகிற்குழாமாய் இடியுடனே வாழ்ந்துவந்தோம் ஏரியில் மீன் பிடித்து கேணியில் துளையவிட்டு உச்சி வெயில் காயும்நேரம் சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம் வாதாம் மரத்தில் ஏறி வாகாய் ஊஞ்சல் கட்டி கேளிக்கைப் போட்டிவைத்து கொட்டைகளைப் பரிசளித்தோம் கோவிலும் காணவில்லை பூசையும் நடப்பதில்லை மரமும் மாறிப்போச்சு மதிலும் வீடுமாச்சு தனியொரு முகிலாய் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விளையாட்டாய்க் கோவில் கட்டி<br />
வீடுதோரும் அறிக்கை ஒட்டி<br />
பொத்தி பொத்தி சேர்த்த காசில்<br />
பொங்க வைத்தோம் ஆண்டு தோரும்</p>
<p>எனக்கென ஒரு கூட்டம்<br />
எதிரணியும் ஒரு கூட்டம்<br />
இருவேறு முகிற்குழாமாய்<br />
இடியுடனே வாழ்ந்துவந்தோம்</p>
<p>ஏரியில் மீன் பிடித்து<br />
கேணியில் துளையவிட்டு<br />
உச்சி வெயில் காயும்நேரம்<br />
சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம்</p>
<p>வாதாம் மரத்தில் ஏறி<br />
வாகாய் ஊஞ்சல் கட்டி<br />
கேளிக்கைப் போட்டிவைத்து<br />
கொட்டைகளைப் பரிசளித்தோம்</p>
<p>கோவிலும் காணவில்லை<br />
பூசையும் நடப்பதில்லை<br />
மரமும் மாறிப்போச்சு<br />
மதிலும் வீடுமாச்சு</p>
<p>தனியொரு முகிலாய் நானும்<br />
திரிந்து கொண்டிருக்கும் வேளை<br />
என்றோ தொலைந்த கனவில்<br />
ஏங்கும் என் நெஞ்சும் நினைவில்&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/71/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நட்பு (7.4.2003)</title>
		<link>http://geeths.info/archives/73</link>
		<comments>http://geeths.info/archives/73#comments</comments>
		<pubDate>Fri, 06 Oct 2006 17:29:10 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/73</guid>
		<description><![CDATA[நட்பென்னும் பாதை தன்னில் நடக்கின்றேன் பல காதம் கடக்கின்ற வழி தோறும் பயில்கின்றேன் பல பாடம் என்னை நான் உணர்ந்த்துகொள்ள உதவியதென் நட்பேதான் என்னை நான் உணர்த்திச்செல்ல ஊக்கம் தரும் நட்பேதான் நட்பென்னை வளர்க்கையிலே நான் பிள்ளை கிப்போனேன் உருவத்தில் மட்டுமின்றி உள்ளத்தும் வளருகின்றேன் நண்பர் சிலர் வருவதுவும் வந்த சில மறைவதுவும் நான் கடக்கும் பாதைதன்னில் காலமும் கடந்து செல்ல.. நிழலுருவம் மறைந்தாலும் நினைவு என்றும் மாறாது நட்புடனே நான் நடக்க நண்பர் என்னைச் சூழ்ந்திருக்க [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நட்பென்னும் பாதை தன்னில்<br />
நடக்கின்றேன் பல காதம்<br />
கடக்கின்ற வழி தோறும்<br />
பயில்கின்றேன் பல பாடம்<br />
என்னை நான் உணர்ந்த்துகொள்ள<br />
உதவியதென் நட்பேதான்<br />
என்னை நான் உணர்த்திச்செல்ல<br />
ஊக்கம் தரும் நட்பேதான்</p>
<p>நட்பென்னை வளர்க்கையிலே<br />
நான் பிள்ளை கிப்போனேன்<br />
உருவத்தில் மட்டுமின்றி<br />
உள்ளத்தும் வளருகின்றேன்<br />
நண்பர் சிலர் வருவதுவும்<br />
வந்த சில மறைவதுவும்<br />
நான் கடக்கும் பாதைதன்னில்<br />
காலமும் கடந்து செல்ல..</p>
<p>நிழலுருவம் மறைந்தாலும்<br />
நினைவு என்றும் மாறாது<br />
நட்புடனே நான் நடக்க<br />
நண்பர் என்னைச் சூழ்ந்திருக்க<br />
என் பாதை நீண்டிருக்க<br />
எழில் எங்கும் நிறைந்திருக்க<br />
நடக்கின்றேன் நானும்தான்<br />
நீயும் கூட வா நண்பா<br />
நட்புடனே நடந்திடலாம்<br />
களிப்புடனே நாள்தோறும்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/73/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒன்றுமில்லை</title>
		<link>http://geeths.info/archives/207</link>
		<comments>http://geeths.info/archives/207#comments</comments>
		<pubDate>Wed, 02 Feb 2005 23:42:46 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/4</guid>
		<description><![CDATA[ஆம் நண்பா.. மறைந்த உன் நினைவுகளைத் தவிற வேறொன்றும் இல்லை விபத்தில் சிக்கியதும் வலியில் வாடியதும் நீ மட்டும் இல்லை.. என் மனதும் தான் வேதனைப் பூக்களை வார்த்தையில் கோர்த்தேன் மனதினுள் பூட்டிவைத்தேன் அது உனக்கேயானது தவழ்ந்து வருவது மாலையின் வாசமான உன் நினைவுகள் மட்டுமே வேறொன்றும் இல்லை..]]></description>
			<content:encoded><![CDATA[<div class="postentry">ஆம் நண்பா..<br />
மறைந்த உன்<br />
நினைவுகளைத் தவிற<br />
வேறொன்றும் இல்லை</p>
<p>விபத்தில் சிக்கியதும்<br />
வலியில் வாடியதும்<br />
நீ மட்டும் இல்லை..<br />
என்  மனதும் தான்</p>
<p>வேதனைப் பூக்களை<br />
வார்த்தையில் கோர்த்தேன்<br />
மனதினுள் பூட்டிவைத்தேன்<br />
அது  உனக்கேயானது</p>
<p>தவழ்ந்து வருவது<br />
மாலையின் வாசமான<br />
உன் நினைவுகள் மட்டுமே<br />
வேறொன்றும்  இல்லை..</p></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/207/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மனம் (19.4.2003)</title>
		<link>http://geeths.info/archives/16</link>
		<comments>http://geeths.info/archives/16#comments</comments>
		<pubDate>Sat, 01 Jan 2005 00:52:49 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்பு]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/16</guid>
		<description><![CDATA[மனம் என்பதோர் மந்திரப் பேழை என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும் அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும் இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்? இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்? இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்? அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனம் என்பதோர் மந்திரப் பேழை<br />
என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை<br />
நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை<br />
அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை<br />
அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும்<br />
அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும்<br />
இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்?<br />
இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்?<br />
இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்?<br />
அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/16/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

