கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'நிலா'

அழகுக்குட்டி நிவிம்மா..

Posted by admin

பட்டு நிவி

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்

முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே

ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..

10 responses so far

வட்ட அப்பம் (24.1.2003)

Posted by admin

வட்டமான அப்பமொன்று
வானில் மிதந்து போகுது
எட்ட நின்று பார்ப்பதற்கே
எச்சில் நாக்கில் ஊறுது
எட்டி யாரும் எடுக்கும்முன்னர்
எடுக்க மனசு துடிக்குது
எட்டிப் பார்த்தும் முடியவில்லை
ஏங்கி மனசு தவிக்குது
நின்று நானும் பார்த்துவந்தேன்
நித்தம் அளவு குறையுது
இன்று பார்க்க வந்தபோது
இல்லாமல் அது போனது
எடுத்துச்சென்ற கள்வன் யாரோ
ஏழை மனசு கலங்குது
கண்டு வந்து சொல்வார் யாரோ
கலங்கும் மனசு கேட்குது

No responses yet