<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கீதாவின் கிறுக்கல்கள் &#187; மரணம்</title>
	<atom:link href="http://geeths.info/archives/tag/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://geeths.info</link>
	<description>என் எண்ணங்கள் கவிதைகளாய்</description>
	<lastBuildDate>Wed, 08 Dec 2010 17:11:03 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>மலர்வளையம்</title>
		<link>http://geeths.info/archives/147</link>
		<comments>http://geeths.info/archives/147#comments</comments>
		<pubDate>Wed, 14 May 2008 03:11:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=147</guid>
		<description><![CDATA[நினைவஞ்சலி எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது எதிர்பாராக் கொடுமைகள் கண்ணெதிரே கண்டவுயிர் கணப்பொழுதில் காலனோடு விழியோரம் தொக்கிநிற்கும் விழிநீரும் உணர்த்திச்செல்லும் வேரினை பிடுங்கிச் சென்ற வேதனை உரக்கச் சொல்லும் வலிகொண்ட மனதிற்கு மருந்தென்ன? மாற்றென்ன? விழிமூடிக் கிடந்தாலும் விட்டத்தை முறைத்தாலும் வார்த்தைகள் விலகிநிற்கும் வலியினை உணர்த்துதற்கு வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும் விழிக்கருவில் வடு போல விலகாமல் என்றென்றும்..]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/ninaivanjali.jpg" alt="நினைவஞ்சலி" /><br />
<strong>நினைவஞ்சலி</strong></p>
<p>எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது<br />
எதிர்பாராக் கொடுமைகள்<br />
கண்ணெதிரே கண்டவுயிர்<br />
கணப்பொழுதில் காலனோடு<br />
விழியோரம் தொக்கிநிற்கும்<br />
விழிநீரும் உணர்த்திச்செல்லும்<br />
வேரினை பிடுங்கிச் சென்ற<br />
வேதனை உரக்கச் சொல்லும்<br />
வலிகொண்ட மனதிற்கு<br />
மருந்தென்ன? மாற்றென்ன?<br />
விழிமூடிக் கிடந்தாலும்<br />
விட்டத்தை முறைத்தாலும்<br />
வார்த்தைகள் விலகிநிற்கும்<br />
வலியினை உணர்த்துதற்கு<br />
வருடங்கள் உருண்டாலும்<br />
வலியின் வாசம் மட்டும்<br />
விழிக்கருவில் வடு போல<br />
விலகாமல் என்றென்றும்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/147/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>தொடரும் தடுப்பூசி மரணங்கள்</title>
		<link>http://geeths.info/archives/134</link>
		<comments>http://geeths.info/archives/134#comments</comments>
		<pubDate>Thu, 01 May 2008 21:03:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=134</guid>
		<description><![CDATA[திருவள்ளூர் 4 திண்டுக்கல் 1 உத்திரபிரதேசம் 2 தர்மபுரி 1 நெல்லை 1 காட்டுமன்னார்கோயில் 1 முடிந்ததா? தொடருமா? பிஞ்சு உயிரென்ன துச்சமா உமக்கு உம்வீட்டில் நிகழ்ந்தால் உச்சுகொட்டி நிற்பீரா? கெஞ்சமாட்டீர் கதறமாட்டீர் தடுப்பூசி மருந்தினை தடைசெய்யமாட்டீர் ஏன் தாமதம்?? போனது யாரோதானே பிரியாவும் பூஜாவும் உமக்கென்ன வேண்டும்? அரசன் மகளென்ன ஆண்டி மகளென்ன உயிர் ஒன்றுதானே பாசம் ஒன்றுதானே வலி ஒன்றுதானே புரியாதா உமக்கு? தடுப்பூசி எதற்காக? நோய் தடுக்கத்தானே? ஊசியே உயிர் குடித்தால் தவறெங்கே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/injection250_29042008.jpg" alt="ஊசியா? உயிர்கொல்லியா?" /></p>
<p>திருவள்ளூர் 4<br />
திண்டுக்கல் 1<br />
உத்திரபிரதேசம் 2<br />
தர்மபுரி 1<br />
நெல்லை 1<br />
காட்டுமன்னார்கோயில் 1</p>
<p>முடிந்ததா? தொடருமா?<br />
பிஞ்சு உயிரென்ன<br />
துச்சமா உமக்கு<br />
உம்வீட்டில் நிகழ்ந்தால்<br />
உச்சுகொட்டி நிற்பீரா?<br />
கெஞ்சமாட்டீர்<br />
கதறமாட்டீர்<br />
தடுப்பூசி மருந்தினை<br />
தடைசெய்யமாட்டீர்<br />
ஏன் தாமதம்??<br />
போனது யாரோதானே<br />
பிரியாவும் பூஜாவும்<br />
உமக்கென்ன வேண்டும்?<br />
அரசன் மகளென்ன<br />
ஆண்டி மகளென்ன<br />
உயிர் ஒன்றுதானே<br />
பாசம் ஒன்றுதானே<br />
வலி ஒன்றுதானே<br />
புரியாதா உமக்கு?<br />
தடுப்பூசி எதற்காக?<br />
நோய் தடுக்கத்தானே?<br />
ஊசியே உயிர் குடித்தால்<br />
தவறெங்கே இருக்கிறது?<br />
மருந்திலா? உடம்பிலா?<br />
சல்லிசாய் வாங்கி<br />
சும்மாய் கொடுத்தீர்<br />
சுலபமாய்ப் போனது<br />
பிஞ்சு உயிர்..<br />
போதும் கொடுமைகள்<br />
முற்றுப்புள்ளி வை<br />
உயிர்களை மதி<br />
நேர்மையாய் செயல்படு<br />
மருந்தினை தடைசெய்<br />
யாராயிருந்தாலும்<br />
உயிர் ஒன்றுதான்<br />
<a href="http://geeths.info/archives/126">இன்று அவர்கள்</a><br />
நாளை&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/134/feed</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)</title>
		<link>http://geeths.info/archives/126</link>
		<comments>http://geeths.info/archives/126#comments</comments>
		<pubDate>Thu, 24 Apr 2008 13:54:52 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=126</guid>
		<description><![CDATA[புள்ள உசுர காக்கத்தானே தடுப்பு ஊசி போட வந்தேன்.. உசுரையே கொன்னுப்போட்டா எங்க போயி முறையிடுவேன்.. பூவப்போல சிரிச்ச புள்ள துவண்டு மேல சரிஞ்சதய்யா.. மழலை பேசும் வாயிலெல்லாம் நுரை ததும்பி வழிந்ததய்யா.. தத்தித்தத்தி வந்த புள்ள தடம் புரண்டு கிடக்குதய்யா.. பெத்த மனம் தாங்கல்லியே சொல்லிச்சொல்லி மாளலியே என்ன சாக்கு சொல்லப்போற யார குத்தம் சொல்லப்போற எம் புள்ள எனக்கு வேணும் எப்ப திருப்பித் தரப்போற.. புகைப்படம் : நன்றி தினத்தந்தி]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/04/pinjugal.jpg" alt="பிஞ்சுகள்" /></p>
<p>புள்ள உசுர காக்கத்தானே<br />
தடுப்பு ஊசி போட வந்தேன்..<br />
உசுரையே கொன்னுப்போட்டா<br />
எங்க போயி முறையிடுவேன்..<br />
பூவப்போல சிரிச்ச புள்ள<br />
துவண்டு மேல சரிஞ்சதய்யா..<br />
மழலை பேசும் வாயிலெல்லாம்<br />
நுரை ததும்பி வழிந்ததய்யா..<br />
தத்தித்தத்தி வந்த புள்ள<br />
தடம் புரண்டு கிடக்குதய்யா..<br />
பெத்த மனம் தாங்கல்லியே<br />
சொல்லிச்சொல்லி மாளலியே<br />
என்ன சாக்கு சொல்லப்போற<br />
யார குத்தம் சொல்லப்போற<br />
எம் புள்ள எனக்கு வேணும்<br />
எப்ப திருப்பித் தரப்போற..</p>
<p>புகைப்படம் : <a href="http://dailythanthi.com/article.asp?NewsID=408496&#038;disdate=4/24/2008&#038;advt=1">நன்றி தினத்தந்தி</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/126/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மரணம் (25-01-03)</title>
		<link>http://geeths.info/archives/86</link>
		<comments>http://geeths.info/archives/86#comments</comments>
		<pubDate>Fri, 06 Oct 2006 17:07:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/archives/86</guid>
		<description><![CDATA[மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மரணம்<br />
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்<br />
துக்கங்கள் தொடுவதில்லை<br />
தூக்கமும் கலைவதில்லை<br />
துடிக்க மறுத்த இதயத்தால்<br />
துடித்ததென்னவோ நாங்கள் தான்</p>
<p>மரணம்<br />
மறுக்க இயலாத மலர்மாலை<br />
வேண்டிச் நின்றால் வருவதில்லை<br />
வந்தபின்னர் செல்வதில்லை<br />
தேடிச்சென்றால் பெருமையில்லை<br />
தேடிவந்தால் வரவேற்புமில்லை</p>
<p>மரணம்<br />
சலனம் இல்லாத சாந்தநிலை<br />
இன்ப துன்பம் தெரிவதில்லை<br />
இழப்பும் உனக்கு புரிவதில்லை<br />
மண்ணில் வாழும் காலம் முடிய<br />
மனிதம் அற்றுபோகும் நிலை</p>
<p>மரணம்<br />
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை<br />
மனித உடல் தேவையில்லை<br />
மண்ணில் இனி வாழ்வதற்கு<br />
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்<br />
மீண்டும் மாற்ற முடிவதில்லை</p>
<p>மரணம்<br />
அழைப்பின்றி வரும் விருந்தாளி<br />
வரும் நேரம் தெரிவதில்லை<br />
வந்த கோலம் புரிவதில்லை<br />
போகச் சொல்ல முடிவதில்லை<br />
போன உயிரும் மீள்வதில்லை</p>
<p>மரணம்<br />
மரித்துப் போவதில்லை<br />
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்<br />
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்<br />
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்<br />
மரணம்<br />
மரிப்பதில்லை நினைவுகள்<br />
மறக்கவில்லை உறவுகள்<br />
முடியவில்லை வார்த்தைகள்<br />
முடிவில்லாத கனவுகள்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/86/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

