கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'கடல்'

கடலின் தாகம்..

Posted by admin

பித்துப் பிடித்தன்ன போடி!!
பிணம் வந்துக் குவிவது கண்டு
திசை எட்டெங்கும் நீர் கண்டபோதும்
எமன் தாகமடங்கலை போடி!!!
பிஞ்சு உயிர்களைக் கொண்டான்
பல வண்ணக் கனவுகள் கொன்றான்
தாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான்
இன்னும் என்னென்னவோ துயர் செய்தான்
கடல் பொங்கின வேகம் கண்டாயோ?
கரை தின்றதன் சோகம் கண்டாயோ?
என்னென்று ஏதென்று சொல்வேன்
மனம் பித்துப் பிடித்தது போடி

No responses yet

கடல்

Posted by admin

கத்தும் கடல் சத்தம் அது
எட்டும் திசை எட்டும்
நித்தம் அதன் மட்டம் தனில்
யுத்தம் உயிர் யுத்தம்

விண்ணும் ஒளிக் கண்ணும் அதில்
மின்னும் அலை மின்னும்
பொன்னோ இது பொன்னோ என
எண்ணும் விழி எண்ணும்

பாடும் கடல் ஆடும் அதில்
ஓடம் ஜதி போடும்
தேடும் வலை தேடும் அதில்
வாடும் உயிர் ஓடும்

கொல்லும் பகல் கொல்லும் அதை
வெல்லும் கலம் வெல்லும்
செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்)
சொல்லும் திசை செல்லும்

காயும் பகல் சாயும் அதன்
சாயம் கடல் பாயும்
தாயின் மடி சாயும் ஒரு
சேயும் என ஆகும்

சேரும் கலம் சேரும் அவை
சேரும் இடம் சேரும்
தோறும் தினந்தோறும் அதன்
ஆடல் அரங்கேறும்

No responses yet