போகி மேளம்

அ) கவிதைகள்

  அலாரம்ம்ம்ம்ம்ம்ம்ம் அடிக்கும் முன்னே எழுந்து ஓடி அரை இருளில் வழியைத் தேடி பங்காளிகளின் கதவைத் தட்டி படை சேர்த்துக் கிளம்பிடுவோம் நடுநடுங்கும் விடியாப் பொழுதில் நடுரோட்டில் போகிக் கொளுத்த.   வாரக்கணக்கா குப்பை சேர்த்து வாசலிலே குவித்துப் போட்டு வானளாவத் தீயத் தூண்டி வாகாய் அதில் சூடு காட்டி ஈர்க்குச்சியை எடுத்து வெட்டி இருமுனையில் தாரை ஒட்டி பதம் பார்த்து அடிக்கையிலே பறையை மிஞ்சும் எங்கள் மேளம்!   அதிகாலைக் குளிரில் அங்கே அனல் பறக்கும் …

Continue Reading
அ) கவிதைகள்

கார்ப்பரேட் பெருச்சாளியின் கைப்பாவைதானே நாம்! அன்று.. கரித்தூளைக் கைப்பற்றி, பற்பசையைத் திணித்தார்கள்! செக்கு நெய்யைச் சீரழித்து சுத்தீகரித்துத் தந்தார்கள்! வரகும் கம்பும் வீணென்று வரட்டு ஓட்ஸ் கொடுத்தார்கள்! கருப்பட்டியைக் கரையவிட்டு கட்டிச் சர்க்கரை வளர்த்தார்கள்! இன்று காராம் பசுவைக் கண்டமாக்க காளை காவு கேட்கிறார்கள்!   அடிமடியில் கைவைக்கும் கார்ப்பரேட் கொழுப்பைத் தடுப்போமா? அன்றி, அண்டை மாட்டினர் கடைவிரிக்க காங்கேயம் காவு கொடுப்போமா?

Continue Reading