பரீட்சை

அ) கவிதைகள்

படியென்று அன்னை சொல்கையிலே தேர்வு நாள் நெருங்கி வருகையிலே படித்தாயா என்று தோழி கேட்கையிலே எனக்கு படிக்கத் தோணலை இன்று தான் தேர்வு என்கையிலே தேர்வு மையத்தில் நுழைகையிலே பத்தே நிமிடங்கள் இருக்கையிலே பலவும் படிக்கத் தோன்றுதே பலநாள் படிக்காத பாடமெல்லாம் பத்தே நொடியில் படித்ததென்ன பத்தே நொடியில் படித்ததனை மணிக்கணக்காய் எழுதி தீர்த்ததென்ன படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர் பைத்தியம் தான் வாரோ? மதிப்பெண் தான் தருவாரோ? பாடத்தை மறந்துதான் போவாரோ?? 101202

Continue Reading