ஆ) க(வி)தை

என்னென்று சொல்வது நான்?
ஏதென்று சொல்வது நான்?
அனுதினமும் செய்திபார்த்து
கலக்கமுற்றுக் கண்ணோக்கும்
கண்மணிக் குழந்தைக்கு
எதையென்று சொல்வது நான்?
பட்டாய் மலர்ந்த பின்னே
பரவிக் கமழும் மணத்தை,
பிணத்தின் வாடை கொண்டே
பேதையவள் அறியலாமா?
சிட்டாய் வளர்ந்து சீராய்ச்
சிரித்துச் சிறக்கும் முன்னே
அமிலச் சிதறல் கொண்டே
அனைத்தையும் பொசுக்கலாமா?
என்னென்று சொல்வது நான்?
பலாத்காரம் என்றால்
யாதெனக் கேட்குமென்
பிஞ்சுப் பெதும்பைக்கு
எதையென்று சொல்வது நான்?
~கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *