ஹி ஹி நான் தான் சொன்னேனே

ஈ) கதை கேளு கதை கேளு

அது ஒரு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடம். அங்கதான் நம்ம கதையின் நாயகன் தற்கொலை செய்துக்க போயிட்டிருந்தான். அவனுக்கு வயசு ஒரு பத்தொன்பது இல்ல இருபது இருக்குமா?.. இருக்கும்… இருக்கும். கருகருன்னு மீசை, அலை அலையா தலைமுடி, கண்ணுல சோகத்தையும் மீறின ஒரு குறுகுறுப்பு, வயதுக்கே உரிய ஒரு துடிப்பு.. இவன் ஏன் தற்கொலை செய்துக்கணும்?? புரியாத புதிரா இருக்கே.. ஒரு வேளை காதல் தோல்வியோ?.. இல்லை பரீட்சையில பெயில் ஆகிட்டானோ? ம்ம்.. சேச்சே இதெல்லாம் காரணமா இருக்காது.. வேற …

Continue Reading

சொர்க்கம் போக டிக்கெட்

ஆ) க(வி)தை

மந்தமான மதியப் பொழுதில்.. மதியும் கொஞ்சம் மயங்கும் பொழுதில்.. இருக்கையில் அமர்ந்து கொண்டு இருவிழி மூடிக் கொண்டு சொர்க்கம் யாதென என்னுள் சொற்போர் நடத்த முனைந்தேன் சொர்க்கம் என்பதும் நிஜமோ சொற்களில் வாழ்ந்திடும் கனவோ பசியும் பிணியும் அங்குண்டோ? பாழும் பணமும் அங்குண்டோ? மண்ணுயிர் நீத்திடும் மக்கள் மாண்டதும் அங்கு செல்வாரோ? யாதது சொர்க்கம் என்று யாரிங்கு சொல்லிடுவாரோ? சட்டென சாலையில் ஏதோ சலசலப்பெழுவது கேட்டு வீதியில் எட்டிப் பார்த்தேன் வீதியில் மக்கள் வெள்ளம் வெறிச்சோடிக் கிடக்கும் …

Continue Reading

ஜன்னலுக்கு அப்பால்..

அ) கவிதைகள்

சீரிய காற்றடிக்க சருகென உதிர்ந்த இலைகள் ஜிவ்வென மேலெழும்பி சிறகுடைய பறவை ஆகி விண்ணிலே நிரம்பி நின்று புள்ளென பயணம் செய்ய… உதவிக்கு வந்த காற்றும் உயரத்தில் விட்டுச் செல்ல அசையாமல் நின்றன மரங்கள் மழையென பொழிந்தன இலைகள் கருத்தது மேகம் தானோ கடல் அதில் குடிபுகுந்தானோ வைரத்தின் வாள்தனை வீசி படைநடுங்க கோஷங்கள் பேசி கடலவன் இறங்கியே வந்தான் மழையென்னும் பெயரினைக் கொண்டான் இயற்கையின் ஜாலம் இதனை வெறுத்திடும் மனிதரும் உண்டோ உண்டெனக் கண்டன விழிகள் …

Continue Reading