மழை ஓய்ந்த விடியல்கள்
——————————————
வெயில் உடுத்தாக் கருக்கல்
துயில் எழும்பா மரங்கள்
இலை அசையாக் காற்று
இசை பரப்பாக் குயில்கள்…
கிளை சொட்டும் துளிகள்
துளி தாங்கிய புற்கள்
மரம் சொரிந்த மலர்கள்
மலர் படர்ந்த தடங்கள்…
குருகு பறக்கும் வானம்
மனதைக் கவ்வும் மௌனம்
மேலும் கவிந்த ஞானம்
ஏகாந்தம்…
இனிமை மட்டுமல்ல!
~கீதா