முகிலற்ற இரவின் நிசப்தத்தில்
ஒன்றையொன்று தழுவிக் களித்தன – குளத்தில்
அல்லி மலரும் வெள்ளி நிலவும்.
***
சாலையெங்கும் பூக்களின் சிதறல்
அதிர்வேட்டுடன் ஆட்டம் பாட்டம்,
வீதியில் சவ ஊர்வலம்.
***
ஆளில்லாத சாலை ஓரம்
ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம்,
நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள்.
***
குளிர்ந்த பின்னிரவின் கருமையில்
ஆங்காங்கே முளைக்கும் உயிர்க் கொல்லிகள்,
சிகரெட் கங்குகள்.
***
மண்ணில் சரியும்போதும் – உயிர்களுக்காய்
கடைசி உயிர்க்காற்றை விட்டுச் சென்றது,
மனிதன் வெட்டிய மரம்.
வணக்கம்
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.
ஆளில்லாத சாலை ஓரம்
ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம்,
நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள்.
இது மிகவும் பிடித்துவிட்டது.