May032008
Posted by கீதா
அனுதினமும் உறிஞ்சியதால்
காலியானது
நிலத்தடி நீர்
[இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது.
என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]
No responses yet
Apr232008
Posted by கீதா

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…
No responses yet
Apr172008
Posted by கீதா

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…
6 responses so far
Apr152008
Posted by கீதா

மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…
****************
நண்பர்களே,
நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….
கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..
இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.
எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.
22 responses so far
Mar122006
Posted by கீதா
இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள்
பகல் வெளிச்சத்தில் அம்பலம்
சிகரெட் துண்டுகள்
2 responses so far
Mar012005
Posted by கீதா
பாலம் கட்டும் பணி..
இரும்புக் கால்களினூடே
நிலைத்த மனிதக் கால்கள்
இரண்டுக்கும் பேதமில்லை
நின்றால்தான் வாழும்
நலிந்தால் அழிந்துவிடும்..
No responses yet