பொய்முகம்

ஆ) க(வி)தை

    பொய்முகம் காட்டிக் காட்டிப் பொழுதெல்லாம் உலவுகின்றார் அகத்தினை மறைக்கும் இவர்கள் அவனியில் அதிகம் உண்டு   விழியினுள் வலியை மறைத்து விரிந்திடும் புன்னகை பூசி கானல்நீர் எனும் பொய்யில் கரைகிறார் பாவம் சிலபேர்!   காரியம் நடத்திடக் குழைந்தும் கேட்டது முடிந்ததும் மறந்தும் பச்சோஞ்தியாய் நிறம்மாறி பாசாங்கு செய்வார் பலபேர்!   இன்னோர் வகை சொல்வேன் இங்கு, இருப்பதிலே அதுதான் தீங்கு!!   வேஷங்கள் நிலைத்திட ஒருமுகம்! வெறுப்பினைக் காட்டிட ஒருமுகம்!! பசப்புகள் செய்திட …

Continue Reading

குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா?)

அ) கவிதைகள்

  முகிலற்ற இரவின் நிசப்தத்தில் ஒன்றையொன்று தழுவிக் களித்தன – குளத்தில் அல்லி மலரும் வெள்ளி நிலவும். *** சாலையெங்கும் பூக்களின் சிதறல் அதிர்வேட்டுடன் ஆட்டம் பாட்டம், வீதியில் சவ ஊர்வலம். *** ஆளில்லாத சாலை ஓரம் ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம், நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள். *** குளிர்ந்த பின்னிரவின் கருமையில் ஆங்காங்கே முளைக்கும் உயிர்க் கொல்லிகள், சிகரெட் கங்குகள். *** மண்ணில் சரியும்போதும் – உயிர்களுக்காய் கடைசி உயிர்க்காற்றை விட்டுச் சென்றது, மனிதன் வெட்டிய …

Continue Reading

விந்தை மனிதர்கள்

அ) கவிதைகள்

ஊருக்கு உபதேசம் சொல்வார் உனக்கும் எனக்கும் இல்லை என்பார். மனிதனை மதி என்பார், மனிதத்தை மிதித்து நிற்பார்! இருப்பவரெல்லாம் சமம் என்பார் இணங்காதவரைப் பிணம் என்பார்! பெண்ணுரிமை பேண் என்பார் பிடிக்காதவளைத் தேள் என்பார்! பிறர் தவற்றை ஓதிடுவார் தன் பிழையைக் கருதமாட்டார் மதிப்பில்லை எனச் சாடிடுவார் அதைத் தரவும் வேணும், அதை தான் மறப்பார்! பலவகை மனிதருள் இவர்களும் ஒருவகை இவர் அன்றும் இருந்தார், இனி என்றும் இருப்பார்!

Continue Reading

ஒய்வு

அ) கவிதைகள்

அந்தி சாயும் நேரம் அழகு ஓவியமாய் வானம் சில்லெனும் தென்றல் காற்று சிலுசிலுக்கும் இலைகள் தூரத்து வானொலியில் தூதுவிடும் ஆசைகள் ஜானி தானே? ஒரு கோப்பைத் தேநீர்

Continue Reading

பாதுகாப்போம் பிள்ளைகளை

அ) கவிதைகள்

பால்முகம் மாறும் முன்னே பாலியல் தொந்தரவாம். பிஞ்சென்றும் அறிவாரோ பிணந்தின்னியின் கீழோர்? நெஞ்சல்ல நஞ்சுடையோர், நரம்பெங்கும் புரையுடையோர், வாய்ப்பொன்று வாய்த்திட்டால் வெறியாடும் வாலினத்தோர் நன்மகனாய் வேடமிட்டு நயங்காட்டும் இழிமனத்தோர். சொந்தமாய் பந்தமாய் சுற்றமாய்ச் சூழலாய் எழிலாக ஒளிந்திருப்பர் எங்கெங்கும் இவர் இருப்பர். வேலி போட வழியுமில்லை வேலிதானா? தெரியவில்லை சொல்வதற்கு ஏதுமில்லை செய்வதற்கோ பஞ்சமில்லை எச்சரிக்கை! எச்சரிக்கை!! எக்கணமும் எச்சரிக்கை!! பிஞ்சுதான் பரவாயில்லை, வஞ்சமெது எடுத்துரைப்போம்! தொடுதலெது தொல்லையெது தொடரும்முன் தெரியவைப்போம்! நயவர் எவர்? கயவர் எவர்? …

Continue Reading

பெண்

அ) கவிதைகள்

அகிலத்தை அழகாக்கி வைத்தாள் – அவள் உலகத்தை பழுதின்றி வைப்போம்!! சாதனைப் பெண்ணிங்கே சிலர்தான் – பலரின் சிறகிங்கே விரிக்க வழி செய்வோம்!! ஆணொருவன் கற்புநிலை பிழன்றால் – அதில் பெண்டிரின் பிழையெங்கே கண்டீர்?? பெண்ணுக்கே உரியதல்ல ஒழுக்கம் – அதை ஆணுக்கும் கற்பிக்கச் சொல்வீர்!! பொன்னான நல்லுலகு செய்வோம்!! – அது பெண்ணுக்கும் உகந்ததாய்ச் செய்வோம்!!

Continue Reading

இரயில் பயணங்கள்

அ) கவிதைகள்

    அதிகாலை நேரத்தில் அன்றலர்ந்த மலர்போலே அழகான நிகழ்வுகளில் அன்றாடப்  பயணங்கள். காபியே பகலுணவாய், கட்டுச்சோறும் பையுமாய் இரயில் பிடிக்க ஓடயிலும் இரசிக்க வைக்கும் பூங்காற்று.   கோவில் மணி ஓசைகளும் கோபுரத்துப் பறவைகளும் மணம் கமழும் மல்லிகையும் மனம் தவழும் நல்லிசையும் காலைக் கருக்கல், அதன் கவின் மிகு மாதிரியாய் கண் முன்னே விரியும் காட்சிகளின் சங்கமங்கள்.   விடியலின் சுறுசுறுப்போடும் சள-சள மனிதர்களோடும் வளைந்து ஓடிடும் இரயில்கள் பல சிந்தையைத் தூண்டிடும் நிஜங்கள். …

Continue Reading

புத்தகம் வாசித்தேன் : கேள்விக்குறி , எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்

ஐ) புத்தகம் வாசித்தேன்

குழந்தைகள் முதன்முதலில் பேசக் கற்றுக்கொண்டவுடன் தமது கேள்விக்கணைகளை பெற்றோர்களிடம் தான் தொடங்குகின்றனர். பெற்றோர்கள் தானே அவர்களின் முதல் ஆசிரியர்கள். “அப்பா ராத்திரியானா இந்த சூரியன் எங்கே போகுது?” “அம்மா  வானம் ஏன்மா நீலமா இருக்கு?” “எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே? அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க? பெற்றோர்கள் சொல்லும் பதில்களில் இருந்து கிளைத்தெழும்புகின்றன மேலும் சில கேள்விகள். நம் வாழ்நாள் முழுதும் நாம் சில கேள்விகளை சுமந்து கொண்டே செல்கிறோம். சில கேள்விகளுக்கு விடை தேடுவோம், …

Continue Reading

 குழந்தைகளின் மௌனம்

அ) கவிதைகள்

  குழந்தைகளின் கூச்சல் கூரையைப் பிளக்கிறது அமைதியாய் இரு மெல்லப் பேசு சிறிது வாயை மூடு என்று அதட்டியபடியே தொடர்கிறது என் பணி..   வீடே அமைதியாய் வெகுநேரம் நிசப்தமாய் ஓடியாடும் சப்தமில்லை வாய்ப்பேச்சும் கேட்கவில்லை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் என் பிள்ளை தாங்கவில்லை தாயெனக்கு ஏன் இப்படி இருக்கின்றாள் என் பிள்ளைக்கென்ன ஆயிற்று? காய்ச்சலோ? உடல்வலியோ? வாய் மூடி அமர்ந்தவளை வாரித் தூக்கி அணைக்கின்றேன் கொஞ்சமும் தாளமுடிவதில்லை குழந்தைகளின் மௌனத்தை.

Continue Reading

இரவல்  பொருட்கள்

அ) கவிதைகள்

  இரவல் பொருளென்றால்? என்னென்று சொல்லிடவா? உபயோகம் முடிந்த பின்னே உரியவர்க்குத் திருப்ப வேண்டும் – இது புரியாத பலர் செயலால் பாதிக்கப் பட்டேன் நான் என்னுடைய பிறந்தநாளில் எனக்கான பரிசுக்காய் என்னிடமே பெறப்பட்ட நூறு எப்பொழுது திரும்பிடும் கூறு? நண்பரின் நண்பருக்காய் நண்பர் சொன்ன காரணத்தால் நான் செலுத்திய கட்டணம் நண்பா நீ தராததேன்? உன் நினைவுக்கது வராததேன்? அப்துல் கலாமின் “அக்கினிச் சிறகுகள்” புத்தம் புது புத்தகமாய்ப் புரட்டிப் பார்க்கும் முன்பே இரவல் வாங்கிச் …

Continue Reading