மனதின் கல்வெட்டுக்கள்( 26.08.2004 )

அ) கவிதைகள்

காலமது உருண்டு செல்ல
கனவென மங்கும் நிஜத்தில்
மீண்டுமொரு பயணம் புரிய
உதவும் மன கல்வெட்டுக்கள்

சுவையில் மனம் மகிழ்ந்திட்டாலும்
‘சுட’ யில் அது வெதும்பிட்டாலும்
படையல் பல காத்திருக்கும்
பந்தி மன கல்வெட்டுக்கள்

அன்றை நினைவில் அகமகிழ
அதனை சிந்தை அபகரிக்க
இன்றை சிறார் பின்னொரு நாள்
இந்த ஏக்கம் அடைகுவரோ?

கடந்து வந்த பாதை இனிது
நடக்கும் பாதை என்றும் புதிது
வாழ்க்கை பயணப் பாதையெங்கும்
மைல்கல் மன கல்வெட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *