பிரிதல்

அ) கவிதைகள்

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே

எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்

ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்

உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்

எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *