அமரக் காதல்

அ) கவிதைகள்

பொத்திவைத்த ஆசைகளை
இரகசியமாய் திறந்துவைத்து
உனக்கான என் அன்பை
உதிராத பாசப் பூவை
நமக்கு மட்டும் புரிந்திருக்கும்
நயன பாஷைக் கவிதைகளை
அழகாய்த் தேர்ந்தெடுத்து
அற்புதமாய்க் கோர்த்துவைத்தேன்
மடலினைக் கண்டுக் கண்டு
நாளெல்லாம் இன்பமுற்றேன்
உனக்கதை அனுப்பிட்டால்
எத்தனை நீ இன்புறுவாய்..
விழிகளின் வார்த்தையன்றி
வேறொன்றும் பேசிலோம் நாம்
வாய்ச்சொற்கள் தேவையில்லை
மனதினை மனம் அறியும்
ஆனாலும்…
சொல்லிடத் தோன்றவில்லை
இதயங்கள் கிழிபடலாம்..
அதனால்..
சொல்லிட்ட திருப்தியுடன்
மடலினை கிழித்துவிட்டேன்
இனி..
இந்த பூமியுள்ளவரை
இருவர் இதயங்களிலும்
வாழும் நம் அமரக் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *