பொடிப் பொடியாய் விழும்
சர்கரைத் தூரல்
விழிவிரித்து பார்க்கயிலும்
வந்தவழி காணல்
ரோமத்தில் நீ மிதக்க
கண்ணுக்குள் ஜில்லிப்பு
நாவில் விழுந்தவுடன்
நெஞ்சுக்குள் தித்திப்பு
கையில் குடையிருந்தும்
விரிக்க மனமில்லை
நனைத்துதான் செல்லட்டுமே
தடையாயிங்கு குடையுமில்லை