தூவானம்

அ) கவிதைகள்

பொடிப் பொடியாய் விழும்
சர்கரைத் தூரல்

விழிவிரித்து பார்க்கயிலும்
வந்தவழி காணல்

ரோமத்தில் நீ மிதக்க
கண்ணுக்குள் ஜில்லிப்பு

நாவில் விழுந்தவுடன்
நெஞ்சுக்குள் தித்திப்பு

கையில் குடையிருந்தும்
விரிக்க மனமில்லை

நனைத்துதான் செல்லட்டுமே
தடையாயிங்கு குடையுமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *