உறங்கும் என் கவிதை

அ) கவிதைகள்

ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்

காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்

எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?

இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..

வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??

19 thoughts on “உறங்கும் என் கவிதை”

  1. மிக அருமை. இன்னும் 3 வருடங்கள் போய் குழந்தை பள்ளிக்குப் போவாள் அல்லவா. அப்போது தலைவாரிப் பூச்சூடும் கவிதை எழுதுவீர்கள்.அதுவரை அவள் உறங்க நீங்கள் ரசிக்கும் கணங்களே கவிதையாகும்.

  2. உயிருள்ள கவிதையாய் உங்கள் குழந்தை இருக்கையில்,வேறு கவிதைக்கு வேலையேது?

  3. நன்றி நண்பர்களே

    குழந்தை செய்யும் எல்லாக் குறும்புமே கவிதை போலத்தான் இருக்கிறது.. ஆனாலும் சமயத்தில் கோவமும் வருகிறது.. என்ன செய்ய?

  4. உறங்கும் உங்கள் கவிதை அழகாக சிரிக்கிறது

  5. வணக்கம் சிவா,

    🙂 உங்களுக்கும், தற்பொழுது எழுதவிடாமல் என்னைப் பிடித்து இழுக்கும் ‘என் கவிதை’க்கும் நன்றிகள்

    அன்புடன்
    கீதா

  6. kuzhanthaikal mattumthan thoongailum azhagu. athupolthann ungal kavithaium. urangum kavithaikal kooda azhakanavaithaan.

  7. “விளையாடும் நேரமெல்லாம்
    உன் வயதேதான் எனக்கும்”

    Mika arumai.

  8. சிவாஜி,பத்மினி நடித்த படம்.பெயர் மறந்துவிட்டது. பெண் குழந்தையை பத்மினி தாலட்டுவதாக வரும்காட்சியில் காலமிது,காலமிது, கண்ணுறங்கு மகளே என்ற பாட்டு மிகவும் பொருள் பொதிந்தது.உங்கள் கவிதை படித்ததும் எனக்கு அந்த பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
    குழந்தையை கவிதையாக உருவகம் செய்வது சிறப்பு.

  9. ungal kavithai padika miga inimayaga irunthathu
    melum neengal ithey pol kavithai elutha vendum
    ungal kavithaiyai nan mei maranthu rasikkirene.
    thaking you

  10. Mikka arumai Geetha…..

    Padikkaiyil enakkum thondriyathu sila varigal….

    Pagirndhu kollalaama ?

    Kirukkalgal Attra Vellai Kaagitham

    Kulandhai…..

  11. கண்ணீரோ கன்னம் நனைக்க
    வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க
    நெஞ்சமோ உன்னை நினைக்க
    காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க
    விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க
    மரணமும் என்னை மறந்து போக
    ஜனனமும் உன்னை நினைத்து உருக
    எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம்

Leave a Reply to பித்தன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *