முன்பெல்லாம்..
என்னுள் தோன்றும்
எனக்கான எண்ணங்களை
வண்ணங்கள் சேர்த்து
வார்த்தையில் கோர்த்து
கவிதையாக்கி ரசித்திருப்பேன்
இப்பொழுதெல்லாம்..
சொர்க்கத்தைக் கண்டாலும்
சோர்வுற்று இருந்தாலும்
பகிர்ந்து கொள்ள ஏதுவாய்
உரிய பக்கம் தேடி
“ஃபேஸ்புக்” மென்கடலில்
நீந்திக் கொண்டிருக்கின்றேன்
எங்கே எனது கவிதை?