இரவல்  பொருட்கள்

அ) கவிதைகள்

 

இரவல் பொருளென்றால்?

என்னென்று சொல்லிடவா?

உபயோகம் முடிந்த பின்னே

உரியவர்க்குத் திருப்ப வேண்டும் – இது

புரியாத பலர் செயலால்

பாதிக்கப் பட்டேன் நான்

என்னுடைய பிறந்தநாளில்

எனக்கான பரிசுக்காய்

என்னிடமே பெறப்பட்ட நூறு

எப்பொழுது திரும்பிடும் கூறு?

நண்பரின் நண்பருக்காய்

நண்பர் சொன்ன காரணத்தால்

நான் செலுத்திய கட்டணம்

நண்பா நீ தராததேன்?

உன் நினைவுக்கது வராததேன்?

அப்துல் கலாமின் “அக்கினிச் சிறகுகள்”

புத்தம் புது புத்தகமாய்ப்

புரட்டிப் பார்க்கும் முன்பே

இரவல் வாங்கிச் சென்றவர்தான்

இன்னுமதை திருப்பவில்லை..

எத்தனையோ கதையிருக்கு

எல்லோர்க்கும் இது இருக்கும்

காசென்பது பொருட்டல்ல

கடமை விளையாட்டும் அல்ல

அன்பளிப்பாய் கேட்டிருந்தால்

அகமகிழ்ந்து கொடுத்திருப்பேன்

அப்பொழுதே மறந்திருப்பேன்

இரவலென கேட்டதால்தான்

இதயம் மறக்கவில்லை

நீங்காமல் வந்துசெல்லும்

நினைவிதனை அகற்றிடவே

ஞாபக மறதி வேண்டும்

இரவல் கிடைத்திடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *