ஆ) க(வி)தை

மண்ணில் வீழ்ந்த
மிட்டாய்த் துண்டை
வீணென ஒதுக்காமல்
விட மனமில்லாமல்
ஊதி ஊதி உண்ணும்
குழந்தை போன்றது தான் –

வேதனை கொடுத்தாலும்
வினை பல புரிந்தாலும்
விட்டு விட முடியாமல்
வருந்தி அழுது
மறக்க மறுத்து
மீண்டும் ஒன்றையே நாடும்
அன்பு கொண்ட மனதும்!

~கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *